பதிவு செய்த நாள்
04 ஜன2018
00:15
புதுடில்லி:‘நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டின், அக்., – டிச., வரையிலான, மூன்றாவது காலாண்டில், இந்திய, ஐ.டி., துறையைச் சேர்ந்த, முன்னணி நிறுவனங்களின் வருவாய், மிதமான அளவிற்கே இருக்கும்’ என, கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்யுட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஐ.டி., நிறுவனங்களின் சேவைகளுக்கான தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனினும், அமெரிக்காவின், ‘விசா’ விதிமுறை மாற்றங்கள், வரி சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை, முன்னணி, ஐ.டி., நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
வங்கி நிதிச் சேவை துறையின் சுணக்கமும், வழக்கமாக, வட அமெரிக்காவில் ஆண்டு இறுதியில் காணப்படும், விடுப்பு கால மந்த நிலையும், முன்னணி, ஐ.டி., நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சிக்கு அணை போடக் கூடும்.அதே சமயம், நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக ஒப்பந்தங்கள் கிடைத்து உள்ளதால், அவற்றின் வருவாய் வளர்ச்சி அதிகரிக்கும் என, தெரிகிறது.
இந்தாண்டு, ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்திற்கு, நிறுவனங்கள் செலவிடுவது அதிகரிக்கும். இது, இந்திய, ஐ.டி., நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|