பதிவு செய்த நாள்
04 ஜன2018
17:15
மும்பை : 2018-ம் ஆண்டு துவங்கி நான்கு நாட்களாகிவிட்டது. இதில் கடந்த மூன்று தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்த நிலையில் வர்த்தகத்தின் நான்காம் நாளில் உயர்வுடன் முடிந்ததுடன், இந்த ஆண்டின் முதல் உயர்வுடன் முடிந்த நாளாக அமைந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து உயர்வுடன் இருந்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 176.26 புள்ளிகள் உயர்ந்து 33,969.64-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 61.60 புள்ளிகள் உயர்ந்து 10,504.80-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டி, எல்அண்ட்டி, ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, எஸ்பிஐ., பார்த்தி ஏர்டெல், டிசிஎஸ்., உள்ளிட்ட பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|