பதிவு செய்த நாள்
05 ஜன2018
00:30
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், கைவினை பொருட்களுக்கு வரி குறைக்கப்படாததால், கைவினை, ‘பர்னிச்சர்’ தொழில் அழியும் நிலையில் இருப்பதாக, அத்துறையினர் வேதனையுடன் கூறுகின்றனர்.
இது குறித்து, தென் மாநில கைவினை பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர், பி.சுப்ரமணியன் கூறியதாவது:
அசாம் மாநிலம், கவுகாத்தியில், டிசம்பரில் நடந்த, ஜி.எஸ்.டி., ஆய்வுக் கூட்டத்தில், பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது. ஆனால், கைவினை, ‘பர்னிச்சர்’களுக்கு, அதாவது, கைவினை அறைகலன்களுக்கு, 18 சதவீதமாக மட்டும் வரி குறைக்கப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி., அமலாவதற்கு முன் வரை, 15 மாநிலங்களில், மதிப்பு கூட்டு வரியில், கைவினை அறைகலன்களுக்கு, முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது. எட்டு மாநிலங்களில், 5 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது, 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
வரி குறைக்காததால், ஏற்கனவே நலிவடைந்துள்ள கைவினை பர்னிச்சர் தொழில், முற்றிலும் அழிந்துவிடும். ஜி.எஸ்.டி.,யை குறைக்க, மத்திய அரசை வலியுறுத்தும்படி பல முறை கோரியும், தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. எனவே, அடுத்த கூட்டத்திலாவது வரியை குறைக்க, தமிழக அரசு, அழுத்தமாக வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|