சரிவில் இருந்து மீண்ட சேவைகள் துறைசரிவில் இருந்து மீண்ட சேவைகள் துறை ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.63.31 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.63.31 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மறு பங்கு மூலதன திட்டம் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.80 ஆயிரம் கோடி பார்லி.,யில் ஒப்புதல் கோரியது நிதி அமைச்சகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2018
00:38

புதுடில்லி:பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, மறு பங்கு மூல­தன திட்­டத்­தில், 80 ஆயி­ரம் கோடி ரூபாய் ஒதுக்க, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம், பார்­லி­மென்­டின் ஒப்­பு­தலை கோரி உள்­ளது.
பொதுத் துறை வங்­கி­கள், வாராக்­க­டன் பிரச்­னை­யில் சிக்­கித் தவிக்­கின்றன. இத­னால், சில வங்­கி­களின் சொத்து மதிப்பு குறைந்­துள்­ளது; கடன் வளர்ச்­சி­யும் சரி­வ­டைந்து உள்­ளது.
இதை­ய­டுத்து, பொதுத் துறை வங்­கி­கள், வாராக்­க­டன் பிரச்­னையை சமா­ளித்து, சொத்து மதிப்பை நிலை நிறுத்­த­வும், கடன் வளர்ச்­சியை அதி­க­ரிக்­க­வும், மறு பங்கு மூல­தன திட்­டத்தை, மத்­திய அரசு, 2017 அக்­டோ­ப­ரில் அறி­வித்­தது.

இத்­திட்­டத்­தில், அடுத்த இரு ஆண்­டு­களில், பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, 2.11 லட்­சம் கோடி ரூபாய், பங்கு மூல­த­ன­மாக வழங்­கப்­பட உள்­ளது.இத்­தொ­கை­யில், 1.35 லட்­சம் கோடி ரூபாய், மறு பங்கு மூல­தன பத்­தி­ரங்­கள் வாயி­லாக வழங்­கப்­படும்.
இத்­து­டன், பட்­ஜெட் ஒதுக்­கீட்­டில் இருந்து, 18,139 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­படும். பொதுத் துறை வங்­கி­கள், மத்­திய அர­சின் குறிப்­பிட்ட சத­வீத பங்­கு­களை, வெளிச்­சந்­தை­யில் விற்­பனை செய்து, 58 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்­டிக் கொள்­ளும் என, அரசு தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், மத்­திய நிதி­ய­மைச்­ச­கம், நடப்பு, 2017 -– 18ம் நிதி­யாண்­டிற்­கான, மூன்­றாம் கட்ட துணை மானி­யக் கோரிக்­கையை, பார்லி.,யில் நேற்று தாக்­கல் செய்­தது. அதில், பொதுத் துறை வங்­கி­களின் மறு பங்கு மூல­தன திட்­டத்­தில், மறு பங்கு மூல­தன பத்­தி­ரங்­களை வெளி­யிட, கூடு­த­லாக, 80 ஆயி­ரம் கோடி ரூபாய் செல­வி­னத்­திற்கு அனு­மதி கோரப்­பட்டு உள்­ளது.

இது குறித்து, நிதி­ய­மைச்­சக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:மானிய கோரிக்­கைக்கு, பார்லி., ஒப்­பு­தல் கிடைத்­த­தும், மறு பங்கு மூல­தன பத்­தி­ரங்­கள் வெளி­யி­டும் நட­வ­டிக்கை
துவங்­கும். இப்­பத்­தி­ரங்­களை அரசு நேர­டி­யாகவோ அல்­லது தனி நிறு­வ­னத்­தின் மூல­மா­கவோ
வெளி­யி­டும். மார்ச்­சுக்­குள் இப்­பணி முடி­வ­டை­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த பத்­தி­ரங்­க­ளுக்­கான வட்டி விகி­தம் உள்­ளிட்ட இதர அம்­சங்­களை, பொரு­ளா­தார விவ­கா­ரங்­கள் துறை தீர்­மா­னிக்­கும்.

மேலும், இந்த பத்­தி­ரங்­க­ளுக்கு, எஸ்.எல்.ஆர்., அந்­தஸ்து வழங்­கப்­ப­டாது. அத­னால், வங்­கி­கள் திரட்­டும் டிபா­சிட்­டில், குறிப்­பிட்ட சத­வீ­தத்தை, கடன் பத்­தி­ரங்­களில் கட்­டா­யம் முத­லீடு செய்­யும் விதி, மறு பங்கு மூல­தன பத்­தி­ரங்­க­ளுக்கு பொருந்­தாது.இத்­திட்­டம், வங்­கி­களின் வாராக்­க­டன் சுமையை குறைத்து, அவற்­றின் சொத்து மதிப்­பின் இழப்பை தடுக்க உத­வும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

கிடுகிடு உயர்வு

பொதுத் துறை வங்­கி­களின் வாராக்­க­டன், 2017 மார்ச் நில­வ­ரப்­படி, 7.33 லட்­சம் கோடி ரூபா­யாக உள்­ளது. இது, 2015 மார்ச்­சில், 2.75 கோடி ரூபா­யாக இருந்­தது. வாராக்­க­ட­னில், 12 நிறு­வ­னங்­களின் பங்கு, 25 சத­வீ­த­மாக உள்­ளது. இது தொடர்­பாக, புதிய திவால் சட்­டத்­தில், நிறு­வ­னங்­கள்
மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)