பதிவு செய்த நாள்
05 ஜன2018
23:49
புதுடில்லி:எச்.டி.எப்.சி., லைப்., இந்தியா பர்ஸ்ட் லைப் உள்ளிட்ட, 12க்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள், ‘பிளாக்செயின்’ தொழில்நுட்ப திட்டத்தில் இணைந்துள்ளன.இந்திய நிதிச் சேவைகள் துறையில், முதன்முறையாக, காப்பீட்டு பிரிவில் தான், இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இதில், காப்பீட்டு நிறுவனங்கள், கே.ஒய்.சி., எனப்படும், ஒரு வாடிக்கையாளர் குறித்த முழு விபரங்களை, பகிர்ந்து கொள்ள முடியும். ஒருவரின் மருத்துவ சிகிச்சை அறிக்கைகள், கோரப்பட்ட காப்பீடு, முகவர் விபரங்களை, பரிமாறிக் கொள்ளலாம். முறைகேடுகளை சுலபமாக கண்டறிந்து தடுக்கலாம்.தற்போது, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ஒரு வாடிக்கையாளர் விபரங்களை தேடவும், காப்பீட்டு தகவல்களை மேம்படுத்தவும், பல மணி நேரம் மற்றும் உழைப்பை செலவிடுகின்றன.
ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும், காப்பீடு கோருவோருக்கு, தனித்தனியாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. அந்த அறிக்கையை, ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து, காப்பீட்டு தகுதி குறித்து தீர்மானிக்கிறது.பிளாக்செயின் திட்டத்தில், இப்பணிகள் அனைத்தும், ஒருங்கிணைந்த தகவல் தொகுப்பாக பெற முடியும் என்பதால், காப்பீட்டு நிறுவனங்களின் செலவு வெகுவாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|