பதிவு செய்த நாள்
05 ஜன2018
23:53
புதுடில்லி:ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில், பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகையை குறைப்பது குறித்து, பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இவ்வங்கி, 2017 ஏப்., 1ல், வங்கிக் கணக்கில் மாதாந்திர சராசரி இருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இதன்படி, நகர்ப்புறங்களில், குறைந்தபட்சம், 5,000 ரூபாய்; கிராமப்புறங்களில், 1,000 ரூபாய் என, வாடிக்கையாளர்கள், தங்கள் சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டும்.இத்தொகை குறைந்தால், அபராதம் விதிக்கப்படும்.இப்படி அபராதம் வசூலித்ததில் மட்டும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு, 8 மாதங்களில், 1,772 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது, ஜூலை – செப்., வரையிலான, இரண்டாவது காலாண்டில், இவ்வங்கி ஈட்டிய, 1,581 கோடி ரூபாய் நிகர லாபத்தை விட அதிகம். அத்துடன், செப்., வரையிலான, ஆறு மாதங்களில் ஈட்டிய, 3,586 கோடி ரூபாய் நிகர லாபத்தில், 50 சதவீதமாகும்.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்ப்பால், அக்டோபரில், நகர்ப்புற வங்கிக் கணக்கின் இருப்புத் தொகை வரம்பு, 3,000 ரூபாயாக குறைக்கப்பட்டது.தற்போது, இத்தொகையை, 1,000 ரூபாயாக குறைப்பது குறித்து, ஸ்டேட் பேங்க் பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, ‘பிரதமரின் ஜன்தன் யோஜனா’ திட்டத்தில் துவக்கப்படும் சேமிப்பு கணக்கு, ஓய்வூதியதாரர்கள், சமூக பயனாளிகள்...குழந்தைகள் மற்றும் அடிப்படை சேமிப்பு கணக்குகளுக்கு, குறைந்தபட்ச இருப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
மிக அதிகம்
பொதுத் துறையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தான், சேமிப்பு கணக்கிற்கான குறைந்தபட்ச இருப்பு, 3,000 ரூபாய் என, அதிகமாக உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|