பதிவு செய்த நாள்
05 ஜன2018
23:55
புதுடில்லி:பன்னாட்டு நிறுவனங்களான, பேயர் மற்றும் மான்சான்டோ இணைப்பால், பாதிப்பு உள்ளதா? என, கருத்து தெரிவிக்கும்படி, சி.சி.ஐ., எனப்படும், சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம், பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, மான்சான்டோ நிறுவனம், இந்தியாவில், மரபணு மாற்ற பருத்தி விதைகள் விற்பனையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபடுகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த, பேயர் நிறுவனமும், இந்தியாவில், காய்கறி விதைகள், பருத்தி விதைகள், பூச்சி மருந்துகள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்கிறது.
இந்நிலையில், பேயர் நிறுவனம், மான்சான்டோ நிறுவனத்தை, 6,600 கோடி டாலருக்கு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. உலகளாவிய இந்த ஒப்பந்தத்தால், உள்நாட்டு, விதைகள் மற்றும் பூச்சிக் கொல்லி நிறுவனங்களுக்கோ, மக்களுக்கோ பாதிப்பு உள்ளதா அல்லது பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து, 15 நாட்களுக்குள், கருத்து கூறும்படி, சி.சி.ஐ., வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|