பேயர் – மான்சான்டோ இணைப்பால் பாதிப்பு?  பொது கருத்து கேட்கிறது சி.சி.ஐ.,பேயர் – மான்சான்டோ இணைப்பால் பாதிப்பு? பொது கருத்து கேட்கிறது சி.சி.ஐ., ... தயாராகிறது மத்திய பட்ஜெட் உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க சுற்றுலா துறையை ஊக்குவிக்க திட்டம் தயாராகிறது மத்திய பட்ஜெட் உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க சுற்றுலா ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நடப்பு நிதியாண்டில் 4 மடங்கு உயரும் பங்கு சந்தையில் அன்னிய நிறுவனங்கள் முதலீடு ரூபாய் 2.20 லட்சம் கோடியை தாண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2018
23:57

மும்பை:‘நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டில், பங்­குச் சந்­தை­களில், அன்­னிய நிதி நிறு­வ­னங்­களின் முத­லீடு, 2.20 லட்­சம் கோடி ரூபாயை தாண்­டும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘இக்ரா’ தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:

கடந்த, 2016 -– 17ம் நிதி­யாண்டை விட, நடப்பு நிதி­யாண்­டில், அன்­னிய நிதி நிறு­வ­னங்­கள், பங்­குச் சந்­தை­களில் மேற்­கொள்­ளும் முத­லீடு, 4 மடங்கு உயர்ந்து, 3,500 கோடி டால­ராக, அதா­வது, 2.20 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
கடந்த நிதி­யாண்­டில், அன்­னிய நிதி நிறு­வ­னங்­கள், பங்­குச் சந்­தை­களில், 700 கோடி டாலர், அதா­வது, 48,400 கோடி டாலர் முத­லீடு செய்­தி­ருந்­தன.நடப்பு நிதி­யாண்­டில், ஏப்., – செப்., வரை­யி­லான அரை­யாண்­டில், 1,500 கோடி டாலர், அதா­வது, 95,600 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்டு உள்­ளது.

இதன்­படி, அக்., – மார்ச் வரை­யி­லான, இரண்­டா­வது அரை­யாண்­டில், அன்­னிய நிதி நிறு­வ­னங்­களின் முத­லீடு, 2,800 – 3,500 கோடி டாலர், அதா­வது, 1.80 –- 2.20 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரிக்­கும் என, கணிக்­கப்­பட்டு உள்­ளது.நடப்பு நிதி­யாண்­டில், அன்­னிய நிதி நிறு­வ­னங்­கள், அதி­க­ள­வில் கடன் பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­துள்ளன. ஏப்., – நவ., வரை, நிகர அள­வில், 1.17 லட்­சம் கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்டு உள்­ளது. இது, ஒட்­டு­மொத்த பங்­குச் சந்தை முத­லீடு உயர வழி­வ­குத்து உள்­ளது.

எனி­னும், அரசு மற்­றும் நிறு­வன கடன் பத்­தி­ரங்­களில், அதி­க­ள­வில் முத­லீடு செய்­யப்­பட்டு விட்­ட­தால், வரம்பு கருதி, வரும் மாதங்­களில், முத­லீடு மித­மான அள­வில் இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.கடன் பத்­தி­ரங்­களில் மட்­டும், நடப்பு நிதி­யாண்­டில், நிகர அள­வாக, 1.50 – -1.60 கோடி லட்­சம் ரூபாய், முத­லீடு இருக்­கும்; பங்­கு­களில், 27 ஆயி­ரம் – 59 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

எனி­னும் இது, நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, நிறு­வ­னங்­களின் வரு­வாய் உள்­ளிட்ட அம்­சங்­களை பொறுத்­துள்­ளது.அமெ­ரிக்­கா­வில், அர­சின் சிக்­கன நட­வ­டிக்கை, வரி மற்­றும் வேலை­வாய்ப்பு சட்ட சீர்­தி­ருத்­தங்­கள், மத்­திய வங்­கி­யின் வட்டி உயர்வு போன்­ற­வற்­றால், கடன் பத்­திர முத­லீ­டு­கள் மீதான வரு­வாய் உயர்ந்­துள்­ளது. இதன் தாக்­கம், இந்­திய கடன் பத்­திர சந்­தை­யில் எதி­ரொ­லித்­துள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

19 மாதங்களில்

‘செபி’யிடம், 2016 ஏப்., – 2017 அக்., வரை, 19மாதங்­களில், 4,500 அன்­னிய நிதி நிறு­வ­னங்­கள் பதிவு செய்­துள்ளன. இதில், நடப்பு நிதி­யாண்டு கணக்கு மட்­டும், 1,064 ஆகும். கடந்த, 2014 – 15ம் நிதி­ஆண்­டில், ‘செபி’ புதிய அன்­னிய நிதி நிறு­வன விதி­மு­றை­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இதன் மூலம், நிதிச் சேவை­யில் உள்ள அன்­னிய நிறு­வ­னங்­கள் அனைத்­தும் ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு, ஒரே குடை­யின் கீழ் கொண்டு வரப்­பட்­டுள்ளன. இதன் கார­ண­மாக, அன்­னிய நிதி நிறு­வ­னங்­களின் பதி­வும், முத­லீ­டு­களும் அதி­க­ரித்து வரு­கின்றன.
‘இக்ரா’ அறிக்கை

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)