பதிவு செய்த நாள்
08 ஜன2018
00:09
‘டிஜிட்டல் பேமென்ட்’ சேவைகளில் இந்தியா மிகவும் மேம்பட்ட பேமென்ட் திட்டங்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
சர்வதேச நிதிச்சேவைகள் நிறுவனமான, எப்.ஐ.எஸ் பேமென்ட் சேவை தொடர்பாக நடத்திய ஆய்வில், இத்தகைய சேவைகளை அளிக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்து உள்ளது. மேலும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட, 25 நாடுகளில் இந்தியா மிகவும் மேம்பட்ட பேமென்ட் சேவை திட்டங்களை பெற்றுள்ளது.
தேசிய பேமென்ட் கார்ப்பரேஷனின் உடனடி பேமென்ட் சேவை திட்டமான, ஐ.எம்.பி.எஸ் திட்டம் பிரதானமாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த சேவை ‘ஆன்லைன்’ மற்றும் மொபைல் சாதனங்களில் பரிவர்த்தனை வசதியை அளிக்கிறது. 24 மணி நேர சேவை, உடனடி பரிவர்த்தனை உள்ளிட்ட அம்சங்களில் இந்த திட்டம் மேம்பட்டிருக்கிறது.
ஸ்மார்ட்போன் மூலம் பண பரிவர்த்தனை செய்ய உதவும் யு.பி.ஐ., திட்டத்தையும், இந்த ஆய்வு, பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|