பதிவு செய்த நாள்
09 ஜன2018
01:06
புதுடில்லி:'கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில், வங்கிகளின் வருவாய் குறைந்திருக்கும்; வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி கண்டிருக்கும்' என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, கோட்டக்இன்ஸ்டிடியூஷனல் ஈக்யுட்டீஸ் நிறுவனம்வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு, 2017 - 18ம் நிதியாண்டின், அக்., - டிச., வரையிலான, மூன்றாவது காலாண்டின் நிதிநிலை அறிக்கைகளை, வங்கிகள் மற்றும் நிதி சாரா நிறுவனங்கள் வெளியிட உள்ளன. இதில், வங்கி துறையின்வருவாய் வளர்ச்சி குறைவாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வாராக்கடனுக்கான ஒதுக்கீடு உயர்ந்துள்ளதும், கருவூல முதலீடுகள் குறைந்துள்ளதும், இதற்கு காரணம்.செப்., 15 நிலவரப்படி, வங்கிகளின் கடன், 7 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 4 - 5 சதவீதம் என்ற அளவிற்கே இருந்தது.எனினும், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன் இருந்த, 9 - 10 சதவீத கடன் வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, குறைவாகவே உள்ளது.
இதற்கு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, வங்கிகள் கடன் வழங்குவது குறைந்துள்ளது தான் காரணம். வங்கிக் கடனில், கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.நிறுவனங்களின் புதிய முதலீடுகள் குறைந்து உள்ளதால், வங்கிகளின் கடன் வளர்ச்சியும் சரிவடைந்து உள்ளது.ஆனால், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வருவாய் சிறப்பாக இருக்கும். பண்டிகை காலம்; ஜி.எஸ்.டி., மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டங்களால் அதிகரித்துள்ள, வீட்டுவசதி கடன்கள்; குறைவான வட்டி விகிதம் ஆகியவற்றால், இவ்வளர்ச்சி சாத்தியமாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|