பதிவு செய்த நாள்
09 ஜன2018
01:08
புதுடில்லி:கடனை திரும்பத் தராத நிறுவனங்கள், இனி அவற்றின் நிர்வாகிகள் ஊதியத்தை நிர்ணயம் செய்ய, கடன் அளித்த வங்கிகளின் ஒப்புதலை பெற வேண்டும்.கடந்த, 2013 நிறுவனங்கள் சட்டத்தின்படி, ஒரு நிறுவனம், நிகர லாபத்தில், 11 சதவீதத்திற்கு மேல், நிர்வாகிக்கு ஊதியம் வழங்க திட்டமிட்டால், அதற்கு, பொதுக் குழுவில், பங்குதாரர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்.இந்த சட்டத்தில், தற்போது திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, வங்கி, நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் கடன் பெற்று, திரும்பத் தராமல், 'வாராக்கடன்' பட்டியலில் இடம் பெற்ற நிறுவனங்கள், புதிய நடைமுறையை கடைபிடிக்க வேண்டும்.இந்நிறுவனங்கள், நிர்வாகிகள் ஊதியத்தை நிர்ணயிக்கும் முன், கடன் நிலுவை வைத்துள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒப்புதலை பெற வேண்டும். பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை வெளியிட்டிருந்தால், முதலீட்டாளர்களின் அனுமதியை பெற வேண்டும்.இதனால், நிறுவனங்கள், ஊதியம் என்ற பெயரில், பெருந்தொகையை, நிர்வாகிகளுக்கு வழங்குவது தடுக்கப்படும்.கடந்த ஆண்டு டிசம்பரில், இந்த நிறுவனங்கள் சட்டத்திருத்தம், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|