பதிவு செய்த நாள்
09 ஜன2018
01:09
ஐதராபாத்:'ஜி.எஸ்.டி., வருவாய் குறைவு காரணமாக, அவசரப்பட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என, 'அசோசெம்' அமைப்பு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இந்த அமைப்பின் தலைவர், சந்தீப் ஜெஜோடியா கூறியதாவது:கடந்த ஆண்டு நவம்பரில், ஜி.எஸ்.டி., வாயிலான வருவாய், 80,808 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இது, அக்டோபரில், 83 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. வரி வசூல் குறைந்து உள்ளதால், எந்த நடவடிக்கையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம் என, மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம். ஜி.எஸ்.டி.,அமலாக்கம் குறித்த கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தி, அது தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால், வரி வருவாய் தானாக உயரும்.மத்திய பட்ஜெட்டில், வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை, தனியார் முதலீட்டை அதிகரிப்பது உள்ளிட்டவற்றுக்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும். ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறைகளில், தனியார் பங்களிப்பு உயர வேண்டும். உரம், நிதி, வேளாண் உற்பத்தி உள்ளிட்டவற்றில், தனியார் துறையுடன், அரசு இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|