பதிவு செய்த நாள்
10 ஜன2018
04:20
புதுடில்லி;தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, நியூஜென் சாப்ட்வேர் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்குகிறது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, 16ம் தேதி துவங்கி, 18ல் முடிவடைகிறது.பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை, 240 ரூபாய்; அதிகபட்ச விலை, 245 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இப்பங்கு வெளியீடு மூலம், 424 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த வெளியீடு தொடர்பான சர்வதேச ஒருங்கிணைப்பு பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஜெப்பரிஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் கவனிக்கின்றன.
இத்துடன், ஐ.டி.எப்.சி., வங்கியுடன் இணைந்து, பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளன.கடந்த, 1992ல் துவக்கப்பட்ட, நியூஜென் சாப்ட்வேர் நிறுவனம், 60 நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, சாப்ட்வேர் சேவை வழங்குகிறது. குறிப்பாக, அரசு நிறுவனங்கள், வங்கிகள், பி.பி.ஓ., மற்றும் பி.பி.எம்., துறை சார்ந்த நிறுவனங்களுக்கு தேவையான சாப்ட்வேர்களை உருவாக்குவதில், இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|