பதிவு செய்த நாள்
11 ஜன2018
00:17
புதுடில்லி:‘தொலை தொடர்பு சேவைக்கான, உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு அளிக்கும் வரிச்சலுகைகளை, வரும் நிதியாண்டிலும் நீட்டிக்க வேண்டும்’ என, ‘தைபா’ அமைப்பு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தொலை தொடர்பு கோபுரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பு – ‘தைபா.’ இதன் டைரக்டர் ஜெனரல், திலக் ராஜ் துவா, கலால் மற்றும் சுங்க வரி வாரிய தலைவர், வனஜா என்.சர்னாவுக்கு அனுப்பி உள்ள கடிதம்:தொலை தொடர்பு கோபுர நிறுவனங்கள், 2.50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், நாடு முழுவதும், 4.50 லட்சம் கோபுரங்களை அமைத்துள்ளன. ஆண்டுக்கு, நிறுவனங்கள் வரி, சேவை வரி என, 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலுத்துகின்றன.
இத்துடன், உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோபுரங்கள், பேட்டரிகள், ‘ஏசி’ மின் சாதனங்கள் உள்ளிட்டவற்றில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்கின்றன.இத்துறை முக்கியத்துவம் கருதி, ஜி.எஸ்.டி.,யில், உள்ளீட்டு வரி பயன் பெறுவதற்காக, தொழிற்சாலை மற்றும் இயந்திரங்கள் பிரிவில், தொலை தொடர்பு கோபுரங்களை சேர்க்க வேண்டும்.
தொலை தொடர்பு உட்கட்டமைப்பு நிறுவனங்கள், உள்நாட்டில் தயாரிக்கப்படும் சாதனங்களில் செய்யும் முதலீடுகளுக்கு, வருமான வரிச் சட்டம், 35 ஏ.டி., பிரிவில் அளிக்கும் வரிச்சலுகை, நீட்டிக்கப்பட வேண்டும். பயன்படுத்தப்பட்டு, கழிவுப் பொருட்களாக விற்கப்படும், பேட்டரி பெட்டி, ‘ஏசி’ டீசல் ஜெனரேட்டர் உள்ளிட்டவற்றின் தொகைக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்களிக்க வேண்டும்.குறித்த காலத்தில் வரி செலுத்த தவறுவோரிடம், எவ்வளவு அபராதம் வசூலிக்கப்படுகிறதோ, அதே தொகையை, நிறுவனங்கள்செலுத்திய கூடுதல் வரியை திரும்பத் தருவதில் ஏற்படும் தாமதத்திற்கும் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|