பதிவு செய்த நாள்
16 ஜன2018
01:11
புதுடில்லி:‘இந்தியாவில் தொழில் துவங்குவதில், இஸ்ரேல் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு, விரைவில் தீர்வு காணப்படும்’ என, மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.இஸ்ரேல் பிரதமர், பென்ஜமின் நெதன்யாஹு, நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக, இந்தியா வந்துள்ளார். அவருடன், 102 நிறுவனங்களைச் சேர்ந்த, 130 தொழிலதிபர்கள் குழு வந்துள்ளது.
இந்நிலையில், சி.ஐ.ஐ., சார்பில், டில்லியில், இந்தியா – இஸ்ரேல் வர்த்தக கருத்தரங்கு நடைபெற்றது. இதில், மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலர், ரமேஷ் அபிஷேக் பேசியதாவது:இந்தியாவில் தொழில் துவங்க, ஒருசில அம்சங்கள் தடையாக உள்ளதாக, இஸ்ரேல் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன .
குறிப்பாக, தொழில் உரிமம், விண்ணப்பங்கள் பரிசீலனை, சுங்க வரி மற்றும் இதர வரிகள் குறித்து, ஐயம் எழுப்பி உள்ளன.இந்த பிரச்னைகள் அனைத்திற்கும், சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்வு காணப்படும் என, நான், இஸ்ரேல் நிறுவனங்களுக்கு உறுதி அளிக்கிறேன். அவை, இந்தியாவில் சுலபமாக தொழில் துவங்கி, மேம்பட்ட வளர்ச்சி காணலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|