பதிவு செய்த நாள்
16 ஜன2018
01:13
சென்னை:தென்னிந்தியாவில், இயற்கை ஆரோக்கிய உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும், மன்னா புட்ஸ் நிறுவனத்தில், மார்கன் ஸ்டான்லி பிரைவேட் ஈக்கியூட்டி ஆசியா நிறுவனம், 132 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
இது குறித்து, மன்னா புட்ஸ் நிறுவனர், ஐ.எஸ்.கே.நாசர் கூறியதாவது:செயற்கை உணவுப் பொருட்களை தவிர்த்து, இயற்கையான பாரம்பரியமிக்க உணவுப் பொருட்களை தயாரித்து வழங்குவதை இலக்காக கொண்டு செயல்படுகிறது, மன்னா புட்ஸ் நிறுவனம். இந்நிலையில், மார்கன் ஸ்டான்லி நிறுவனம், எங்களது நிறுவனத்தில், 152 கோடி ரூபாயை முதலீடு செய்து, எங்களுடன் பங்குதாரராக இணைந்துள்ளது.
இந்திய சந்தையில், ஆரோக்கிய உணவுப் பொருட்களை பரவலாக கொண்டு செல்வதற்கு வலு சேர்ப்பதாக, இந்த முயற்சி அமையும். குறிப்பாக, தென்னிந்தியாவில், எங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு, இந்த நிதி பயன்படுத்திக் கொள்ளப்படும்.
மார்கன் ஸ்டான்லி இணை தலைவர், அர்ஜுன் செய்கல் கூறுகையில், ‘‘உள்நாட்டில் விளையும் தானிய வகைகளை கொண்டு, சத்தான உணவுப் பொருட்களை, குறைந்த விலையில், வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கவும், மன்னாவின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லவும், இந்த கூட்டு முயற்சி உதவியாக இருக்கும்,’’ என்றார்.ஏற்கனவே, மன்னா புட்ஸ், அதன் விரிவாக்க திட்டங்களுக்காக, 2015ல், பில்கிரம் நிறுவனத்திடமிருந்து, 30 கோடி ரூபாய் நிதியை பெற்றுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|