பதிவு செய்த நாள்
17 ஜன2018
00:47
புதுடில்லி : பாபா ராம்தேவின், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், அதன் பல்வேறு பொருட்களை, எட்டு வலைதள சந்தை நிறுவனங்கள் மூலம் விற்க, ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து, பாபா ராம்தேவ் கூறியதாவது: பதஞ்சலி பொருட்களுக்கு, நுகர்வோரிடம் வரவேற்பு பெருகி வருகிறது. இந்நிலையில், நுகர்வோர் மேலும் சுலபமாக, பதஞ்சலி பொருட்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில், வலைதளங்களிலும் விற்பனையை துவக்கி உள்ளோம். இதற்காக, ‘அமேசான் இந்தியா, குரோபர்ஸ், ஷாப்க்ளுஸ், பிளிப்கார்ட், பிக்பாஸ்கட், பேடிஎம் மால்’ உட்பட, எட்டு வலைதள சந்தை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இத்துடன், மருத்துவர்கள் பரிந்துரையுடன், பதஞ்சலி மருந்துகளை, நெட்மெட்ஸ், 1 எம்.ஜி., ஆகிய வலைதள சந்தைகளில் வாங்க வசதி செய்யப்பட்டு உள்ளது. வலைதளங்களில், பதஞ்சலி பொருட்கள் அனைத்தும், கடைகளில் விற்கப்படும் விலைக்கே வழங்கப்படும்; எவ்வித தள்ளுபடி சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது. கடைகளின் விற்பனை பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|