பதிவு செய்த நாள்
20 ஜன2018
00:30
புதுடில்லி : ‘‘வலைதளங்களில், பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளும் வசதியால், மக்கள், நிறுவனங்களின் செயல்பாடுகளை அறியவும், தவறுகளை கண்டுபிடிக்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது,’’ என, மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.
மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம், தேசிய நிறுவனங்களின் சமூக பெறுப்புணர்வு செயல்பாடுகள் மற்றும் தகவல்களுக்கு என, இரு வலைதளங்களை உருவாக்கி உள்ளது.
இந்த வலைதளங்களை, அருண் ஜெட்லி துவக்கி வைத்து பேசியதாவது: வலைதள வசதியால், ஒரு நிறுவனம் குறித்த முழுமையான தகவல்களை அறியவும், செயல்பாடுகளில் தவறு இருந்தால், அதை வெளிப்படுத்தவும் முடிகிறது. போலி நிறுவனங்கள் மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளும் தெரிய வருகின்றன. ஆகவே, இந்த வெளிப்படையான செயல்பாடுகள், இந்திய நிறுவன துறைக்கு நல்லது. ஒரு நிறுவனம் எந்த அளவிற்கு வெளிப்படையாக தகவல்களை வெளியிடுகிறதோ, அந்த அளவிற்கு அது, மக்களுக்கும் நன்மை பயக்கும்.
நிறுவனங்களின், சமூக பொறுப்புணர்வு செயல்பாடுகள் குறித்த அனைத்து விபரங்களையும், மக்கள் அறிய, நிறுவன விவகாரங்கள் துறையின் வலைதளம் உதவும். நிறுவனங்கள் சட்டத்தில், மூன்று ஆண்டுகள் நிகர லாபம் ஈட்டிய நிறுவனங்கள், அவற்றின் லாபத்தில், 2 சதவீதத்தை, சமூக நற்காரியங்களுக்கு செலவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பான வளர்ச்சி:
கடந்த, 2014 – 15ம் நிதியாண்டில், 5,870 நிறுவனங்கள், மருத்துவமனை, பள்ளிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உட்பட, சமூக பொறுப்புணர்வு செயல்பாடுகளுக்கு, 9,554 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன. இது, 2015 – 16ல், 7,983 நிறுவனங்கள் மற்றும் 13,625 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|