பதிவு செய்த நாள்
21 ஜன2018
04:34
பென்ஸ்இந்தியாவில் தயாரான முதல் கார்மெர்சிெடஸ் பென்ஸ் நிறுவனம், இந்திய ஆலைகளில் உருவான, முதல், பி.எஸ்., 6 காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில், சுற்றுச்சூழல் மாசை குறைப்பதற்காக, பி.எஸ்., 4 எனும் விதிமுறைகளுக்கு ஏற்ற, புகை குறைவாக வெளியிடும் வாகனங்களை தயாரிப்பது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும், 2020 முதல், அதை விட தரம் உயர்வான, பி.எஸ்., 6 விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வாகனங்களை உருவாக்க, இந்திய அரசு கெடு விதித்துள்ளது.ஆனால், மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம், ஒருபடி மேலே போய், இரு ஆண்டுகளுக்கு முன்பாகவே, உள்நாட்டில், பி.எஸ்., 6 விதிகளுக்கு உட்பட்ட, ‘எஸ் கிளாஸ்’ காரை, புனேவில் உள்ள அதன் ஆலையில் தயாரித்துள்ளது. அதன் அறிமுக நிகழ்ச்சியில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி பங்கேற்று பாராட்டி உள்ளார். நம் நாட்டில், பி.எஸ்., 4 எரிபொருள் மட்டுமே, தற்போது பெட்ரோல் நிலையங்களில் கிடைக்கிறது. அதை கொண்டே, இந்த காரை இயக்க முடியும் என, அந்நிறுவனம் கூறியுள்ளது.
யமஹா
முதல் 125 ‘சிசி’ ஸ்கூட்டர்யமஹா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் முதல், 125 ‘சிசி’ ஸ்கூட்டரை தயாரித்து உள்ளது. இதை, அடுத்த மாதம் அறிமுகப்படுத்த பரிசீலித்து வருகிறது. இந்த புதிய ஸ்கூட்டர் குறித்த விபரங்களை வெளியிடாமல் அமைதி காக்கும் யமஹா, டில்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.‘நோசா கிராண்டு’ என, பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், அறிமுகம் செய்யப்பட்டால், இந்தியாவில் யமஹாவின் முதல், 125 ‘சிசி’ ஸ்கூட்டராக இருக்கும். பார்ப்பதற்கு, ‘ஸ்டைலாக’ காட்சி தரும் இந்த ஸ்கூட்டரில், சீட்டின் கீழ்பகுதியில், 27 லி., கொள்ளளவு கொண்ட பொருட்களை வைப்பதற்கான விசாலமான இட வசதி உள்ளது. அதில், ‘ஹெல்மெட்’டை தாராளமாக வைக்கலாம் என்பது, ஸ்கூட்டர் பிரியர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் தகவல். டில்லி ஷோரூமில் துவக்க விலை, 60 ஆயிரம் – 65 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர், ‘ஹோண்டா கிராசியா, ஆக்டிவா 125, சுசூகி ஆக்சஸ் 125’ மற்றும், ‘டி.வி.எஸ்., கிராபைட்’ ஆகியவற்றுக்கு போட்டியாக விளங்கும்.
பஜாஜ்
விலை வெளியானதுபஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்புகளில், பிரபலமாக விளங்கும் பைக்குகளில் ஒன்றான, ‘அவெஞ்சர்’ சில மாற்றங்களுடன் அறிமுகமாகி உள்ளது.இந்தியாவில் தயாரான முதல், ‘க்ரூஸர்’ ரக பைக்கான அவெஞ்சர், போட்டியாளர்களுக்கு இடம் தராமல், முதலிடத்தை தக்க வைத்துள்ளது. அவெஞ்சர் பைக்குகளில், 220 ‘சிசி’ தான், அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இது, ‘ஸ்ட்ரீட், க்ரூஸர்’ ஆகிய வேரியன்ட்களில் விற்கப்படுகிறது. அதனால், அந்த பைக்கில் மட்டும் சில மாற்றங்களை செய்து, 2018ல், பஜாஜ் நிறுவனம் களமிறக்கி உள்ளது. இதில், இரு வேரியன்ட்களிலும், பல புதிய அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளன.குறிப்பாக, எல்.இ.டி., முகப்பு விளக்கு, ‘டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் பாட்’ ஆகிய சில அம்சங்களை கூறலாம். இரு வேரியன்ட்களிலும், ‘மூன் ஒயிட்’ எனும், புதிய வண்ணப்பூச்சு கண்ணை கவரும் வகையில் உள்ளது. மேலும், நீண்ட துார பயணங்களுக்கு ஏற்ப, இரு வேரியன்ட்களிலும் இருக்கைகள் சிறிது மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் விலை, டில்லி ஷோரூமில், 93,466 ரூபாயில் இருந்து துவங்குகிறது.
வாகன திருவிழா
பிப்., 9 – 14 வரை கோலாகலம்இந்தியாவில், வாகன உற்பத்தியாளர்கள், விற்பனை துறை சார்ந்தவர்கள் மற்றும் வாகன பிரியர்கள், மிக ஆர்வமாக எதிர்பார்க்கும், ‘தி மோட்டார் ஷோ’ எனப்படும், சர்வதேச வாகன திருவிழா நடைபெறும் நாள் நெருங்கி விட்டது.டில்லியில், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த வாகன கண்காட்சி, வழக்கம் போல், கிரேட்டர் நொய்டாவில் உள்ள, ‘இந்தியா எக்ஸ்போ மார்ட்’ திடலில், பிப்., 9 – 14 வரை நடக்கிறது.இதில், இந்தியா மற்றும் சர்வதேச வாகன உற்பத்தி நிறுவனங்கள், புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளன. இதற்காகவே, பல நிறுவனங்கள் புது அறிமுகங்களை ரகசியமாக வைத்துள்ளன. சில நிறுவனங்கள், ஆவலை துாண்டும் விதமாக, அடுத்த தயாரிப்புகள் குறித்த முன்னோட்டங்களை வெளியிட்டு, அதன் மாதிரி வாகனங்களை காட்சிக்கு வைக்கும். இதை, ‘சியாம்’ எனப்படும், இந்திய வாகன உற்பத்தியாளர்கள் அமைப்பு, இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஆட்டோ உதிரி பாக ஆலை கூட்டமைப்பினர் இணைந்து நடத்துகின்றனர். இம்மாநாடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, சில தினங்களுக்கு முன், ‘சியாம்’ கண்காட்சிகள் பிரிவு தலைவர், அருண் மல்ஹோத்ரா அறிவித்தார்.
‘கியா’ விரைவில் காட்சிக்கு வருகிறதுதமிழகத்திற்கு வரவிருந்த, ‘ஹூண்டாய்’ கார் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘கியா மோட்டார்ஸ்’ நிறுவனம், ஆந்திராவில் ஆலை துவங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக, அதன் கார்களை, இந்திய கார் வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்தி, எதிர்பார்ப்பை ஏற்படுத்த உள்ளது.இதற்கு, பிப்ரவரியில், டில்லியில் துவங்கும் வாகன கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு உள்ளது. அங்கே, பலவிதமான கியா கார்களை காட்சிப்படுத்த உள்ளது.எனினும், அடுத்த ஆண்டு முதல், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எனக் கருதப்படும், எஸ்.யு.வி.,யின் மீது தான், அனைவரது கவனமும் குவிந்திருக்கிறது. ‘ஹூண்டாய்’ தயாரிப்பான, ‘கிரெட்டா’வை விட, இந்த, எஸ்.யு.வி., அளவில் சிறிது பெரிதாக இருக்குமாம். இதற்கு, இன்னும் பெயரிடப்படவில்லை. ஆனால், இந்தியாவில் தயாரிக்க உள்ள, சிறிய ரக, ‘செடான்’ காரை, கண்காட்சியில் காட்சிப்படுத்தாமல், ரகசியமாக வைக்க திட்டமிட்டுள்ளது, கியா.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|