பதிவு செய்த நாள்
22 ஜன2018
05:10
வட்டி விகித போக்கு சேமிப்பு, முதலீட்டின் பலன் மீது தாக்கம் செலுத்துவதால், இதற்கான அடிப்படை காரணங்களை அறிந்து கொள்வது நிதி திட்டமிடலில் உதவும்.
கடந்த ஓராண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது. வங்கிகள் டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளன. இதன் காரணமாக மாத வருமானம் மற்றும் நீண்ட கால முதலீட்டிற்கு இந்த நிதி சாதனங்களை நாடுபவர்களுக்கு ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வட்டி விகிதம் குறையும் போக்கு காரணமாக முதலீட்டு உத்தியில் மாற்றம் தேவையா என, பரிசீலிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு முன், கடன் மற்றும் டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்களை புரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். ரெப்போ விகிதம்வட்டி விகிதம் குறைவது அல்லது உயர்வதில் ரெப்போ விகிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கிகளுக்கு வழங்கிய பத்திரங்களை நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் ரிசர்வ் வங்கி மீண்டும் வாங்கி கொள்வது ரெப்போ பரிவர்த்தனை எனப்படுகிறது. இந்த பரிவர்த்தனை ரெப்போ விகிதம் அடிப்படையில் அமைகிறது. வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெறும் விகிதம் என்றும் இதை புரிந்து கொள்ளலாம். பொருளாதாரத்தில் பெரும்பாலான நிதி பரிவர்த்தனைகள் வங்கிகளை மையமாக கொண்டு நடப்பதால் ரெப்போ விகித மாற்றம் வட்டி விகிதத்தை பாதிக்கிறது.ரெப்போ விகிதம் அதிகமாக இருந்தால் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து அதிக விகிதத்தில் கடன் வாங்குகின்றன என பொருள். இதன் காரணமாக வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கிறது. இதற்கேற்ப டிபாசிட்களுக்கான வட்டியும் உயர்கிறது. அதே போல, அரசும் பி.பி.எப்., கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து டிபாசிட் பெறுகிறது. ரெப்போ விகிதம் உள்ளிட்ட வழிகளில் இருந்து கிடைக்கும் வருமானம் கொண்டே அரசு இதற்கான வட்டியை அளிக்கிறது. (வங்கிகள் ரெப்போ விகிதத்திற்கு ஏற்ப அரசுக்கு வட்டி அளிக்கின்றன). இந்த விகிதம் குறைவது அரசின் வட்டி அளிக்கும் ஆற்றல் மீது தாக்கம் செலுத்துகிறது. எனவே ரெப்போ விகிதம் குறையும் சூழலில் வட்டியும் குறைகிறது.நாட்டின் பொருளாதாரத்தில் பண புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகளில் ஒன்றாக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி பயன்படுத்துகிறது. வங்கிகளின் வட்டி விகிதம் வர்த்தக நிறுவன முதலீடு மற்றும் தனிநபர் சேமிப்பு மீது தாக்கம் செலுத்துவதால், இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்தும். இவை பரஸ்பரம் தொடர்பு கொண்டவை. பணவீக்கம்பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கான விலையில் ஏற்படும் மாற்றத்தின் விகிதமே பணவீக்கமாக அமைகிறது. பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் போது பணத்தின் மதிப்பு குறைகிறது. அப்போது அதிக வட்டி விகிதம் ஈடுசெய்கிறது. பணவீக்க விகிதம் குறைவாக இருக்கும் போது பணத்தின் மதிப்பு பாதுகாக்கப்படுகிறது. இதனால் அதிக தாக்கம் ஏற்படுவதில்லை. வட்டி விகிதத்தில் இருந்து பணவீக்கத்தை கழிப்பதையே உண்மையான பலன் விகிதமாக கொள்ள வேண்டும். பொதுவாக பொருளாதார மந்தநிலை சூழலில் அரசுக்கான வருமானம் குறையும் வாய்ப்பு இருப்பதால், இதன் காரணமாகவும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறையலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|