பதிவு செய்த நாள்
22 ஜன2018
05:21
பங்குகளை வாங்கும் முடிவுகளை எடுப்பது ஒரு கலை என்பது அனைவருக்கும் தெரியும். பங்குகளை சரியாக தேர்வு செய்யும் முறையை கற்க விரும்பும் ஒவ்வொரு முதலீட்டாளரும், பங்கு வர்த்தகத்தில் அதிக ஆர்வம் செலுத்துவோரும், இந்த புரிதலை வெளிப்படுத்த வேண்டும்.சந்தையில் ஆர்வம் காட்டும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், தன்னை ஒரு நல்ல பங்கு தேர்வாளராக உருவாக்கிக் கொள்ள, ஒரு தீவிரம் இருக்கும்.ஒரு சிறந்த பங்கு முதலீட்டாளர், தன்னை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும்?முதலில் பங்குகளை வாங்குவதிலும், விற்பதிலும் செலுத்தும் நேரத்தை குறைத்துக் கொண்டு, அந்த நேரத்தை, அறிவுபூர்வமான தேடல்களில் செலவிட வேண்டும். பல துறை சார்ந்த புரிதல்களை வளர்க்க முற்பட வேண்டும். இதற்கு வர்த்தகம், பொருளாதாரம், தொழில்முறை, நுகர்வு, சட்டம், கணக்கு, பொதுகொள்கைகள், சுற்றுச்சூழல் கொள்கைகள், நிறுவன ஆட்சி முறைகள் என, பல துறை சார்ந்த புரிதல்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.அதிக கால அவகாசம்இந்த துறைகளில் ஏற்படும் தொடர் மாற்றங்கள், மற்றும் அவை தொழில்களின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை தெளிவாக கணிக்கும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். பன்முகத் தன்மை ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் இருக்க வேண்டிய அவசிய திறன் ஆகும்.சந்தையில் வெற்றியாளர்களாக விளங்கும் நபர்களிடம் இந்த திறன் தெளிவாக வெளிப்படும். இத்தகைய திறன்கள் நம்மில் உருவாக பல காலம் ஆகும் என்பதை நாம் உணர்ந்து, அவற்றை ஏற்படுத்திக் கொள்ள முற்பட வேண்டும்.இவற்றை வளர்த்துக் கொண்டு, முதலீடு செய்ய வேண்டுமானால் பல காலம்ஆகுமே?ஒரு முதலீட்டாளர் இந்த திறன்களில் தேர்ச்சி பெற அதிக கால அவகாசம் தேவைப்படும். ஆனாலும், தொடர்ந்து திறன் மேம்பாட்டில் ஒவ்வொரு முதலீட்டாளரும் ஈடுபட வேண்டும். புரிதல்களை காலப்போக்கில் உருவாக்கி கொள்ள முற்பட வேண்டும். முதலீட்டில் செலவிடும் தேரத்தைவிட, திறன் வளர்ப்பில் அதிக நேரம் செலுத்த வேண்டும்.ஒரு முதலீட்டு முடிவை எடுப்பதற்கு, என்னென்ன திறன்கள் அவசியம் என்று முதலில் பட்டியலிட வேண்டும். இது துறைக்கு துறை மாறுபடும். ஒவ்வொரு துறையில் ஆய்வு செய்யும் போதும், அந்த துறை சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இப்படி தொடர்ந்து பல துறைகளில் முதலீடு செய்யும்போது, நம் திறன் மேம்படும். திறன் மேம்பாட்டின் முக்கிய அங்கமாக, புதிய துறைகளில் முதலீடு செய்வது அவசியம். அத்தகைய முதலீடுகளை சிறிய தொகைகளில் செய்தால், அது முதலீட்டாளரின் நிதிநிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது இருக்கும்.வெற்றி நிச்சயம்ஓரளவு புரிதல் அமைந்தவுடன், துவக்க முதலீட்டை விரிவாக்க, மேலும் தேவையான தொடர் புரிதலை வளர்த்துக் கொள்வது அவசியம். இதற்கு பல துறைசார் வல்லுனர்கள் மற்றும் சக முதலீட்டாளர்களுடன் கலந்தாய்வு செய்வது நல்லது.பகிர்வு அடிப்படையில், ஒரு துறை மற்றும் குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்த நம் புரிதல் விரிவுபடும்.அதன்மூலம் ஒரு முதலீட்டு முடிவில் ஏற்படும் தெளிவும், நம்பிக்கையும் அதன் வெற்றிக்கு இன்றியமையாததாக அமையும். இந்த நம்பிக்கை வளர்ப்பு சார்ந்த நகர்வில் ஈடுபடுவதே, ஒரு முதலீட்டாளரின் நேரத்தில் பெரும்பங்கு செலவாகும்.பணத்தை முதலீடு செய்து வெற்றி பெற விரும்புவோர், முதலில் நேரத்தை முதலீடு செய்து, தயார்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|