பதிவு செய்த நாள்
22 ஜன2018
17:07
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் புதிய உச்சத்துடன் நிறைவு செய்தன. நிப்டி 11 ஆயிரம் புள்ளிகளை நெருங்குகிறது.
இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி., போன்ற நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டதாலும், அந்நிய முதலீடுகள் அதிகரித்ததாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்ததுடன் புதிய உச்சத்தையும் தொட்டு நிறைவு செய்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 286.43 புள்ளிகள் உயர்ந்து 35,798.01-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 71.50 புள்ளிகள் உயர்ந்து 10,966.20-ஆகவும் முடிந்தன. இதன்மூலம் நிப்டி 11 ஆயிரம் புள்ளிகளை நெருங்கி உள்ளது. நாளைய வர்த்தகமும் உயர்வுடன் ஆரம்பமாகும் பட்சத்தில் நிப்டி 11 ஆயிரத்தை எட்டும் என தெரிகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|