பதிவு செய்த நாள்
23 ஜன2018
01:06
ஐதராபாத் : ‘‘ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், அவை செழித்து வளரும்,’’ என, இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி, வி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: வலைதளங்களில் புதுமையான வர்த்தகம் புரியும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை, 25 – 35 வயதுடையோர் தான் அதிகம் துவங்குகின்றனர். அத்தகையோர், பெரு நிறுவனங்களுக்கான, 30 – 40 சட்ட விதிமுறைகளை பின்பற்றுவது கடினம். அதனால், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். இத்துறையினருக்கு, சர்வதேச சந்தை வாய்ப்புகளை பயன்படுத்த தேவையான நிதியுதவி, திறமை, ஆற்றல் என, அனைத்தும் உள்ளது. இதை நல்லவிதமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மிதமான கட்டுப்பாட்டு சூழலை அமைத்து தர வேண்டியது அவசியம்.
சமீபத்தில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், திரட்டும் முதலீட்டிற்கு வரி செலுத்தக் கோரி, வருமான வரி துறை, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்குவோரின் ஆர்வத்தை குறைத்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|