அனைவருக்குமான வளர்ச்சி குறியீடு: 62வது இடத்தை பிடித்தது இந்தியாஅனைவருக்குமான வளர்ச்சி குறியீடு: 62வது இடத்தை பிடித்தது இந்தியா ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.63.82 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.63.82 ...
அக்., – மார்ச் வரையிலான காலத்தில் 7 சதவீதமாக ஜி.டி.பி.,உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2018
01:09

டாவோஸ் : ‘‘அனைத்து துறை­க­ளி­லும், வளர்ச்சி காணப்­ப­டு­வ­தால், நடப்பு நிதி­யாண்­டின், அக்., – மார்ச் வரை­யி­லான அரை­யாண்­டில், ‘ஜி.டி.பி.,’ எனப்­படும் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, அர­சின் மதிப்­பீட்டை விட உயர்ந்து, 7 சத­வீ­தத்தை எட்­டும்,’’ என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­னர், சந்தா கோச்­சார் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

ஐரோப்­பிய நாடான சுவிட்­சர்­லாந்­தில், டாவோஸ் நக­ரில் சர்­வ­தேச பொரு­ளா­தார மாநாடு நடை­பெ­று­கிறது. இதில் பங்­கேற்க வந்த சந்தா கோச்­சார், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது: மத்­திய புள்­ளி­யி­யல் அலு­வ­ல­கம், நடப்பு 2017 – 18ம் நிதி­யாண்­டின் ஜி.டி.பி., 6.5 சத­வீ­த­மாக இருக்­கும் என, தெரி­வித்­துள்­ளது. ஏப்­ரல் – செப்­டம்­பர் வரை­யி­லான அரை­யாண்­டில், ஜி.டி.பி., 6 சத­வீ­த­மாக இருந்­தது. இது, அனைத்து துறை­களில் வளர்ச்­சிப் போக்கு காணப்­ப­டு­வ­தால், இரண்­டா­வது அரை­யாண்­டில், 7 சத­வீ­த­மாக உய­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அத­னால், நடப்பு நிதி­யாண்­டின் ஜி.டி.பி., புள்­ளி­யி­யல் அலு­வ­ல­கம் ஏற்­க­னவே மதிப்­பிட்ட, 6.5 சத­வீத வளர்ச்­சியை தாண்­டும் என, கூற­லாம். அனைத்து துறை­க­ளி­லும் முன்­னேற்­றம் காணப்­ப­டு­வ­தால், இது, சாத்­தி­ய­மா­கும். உதா­ர­ண­மாக, மக்­களின் நுகர்வு அதி­க­ரித்தி­ருப்­பதை, தொழில் உற்­பத்தி குறி­யீட்­டின் வளர்ச்­சி­யில் இருந்து அறிந்து கொள்­ள­லாம். தனி­ந­பர் கடன், உள்­நாட்டு பய­ணி­யர் போக்­கு­வ­ரத்து, இரு சக்­க­ரம் உள்­ளிட்ட அனைத்து வாகன விற்­பனை ஆகி­ய­வற்­றின் வளர்ச்சி அதி­க­ரித்­துள்­ளது. கடந்த சில மாதங்­க­ளாக, தயா­ரிப்பு துறை­யின் வளர்ச்­சி­யும் நன்கு உள்­ளது.

நாட்­டின் ஏற்­று­ம­தி­யும், கடந்த நிதி­யாண்டை விட, நடப்பு நிதி­யாண்­டில் அதி­க­ரித்­துள்­ளது. இந்­தி­யா­வின் அன்­னியசெலா­வணி கையி­ருப்பு, ஓராண்­டுக்­கும் மேலான இறக்­கு­ம­தியை சமா­ளிக்­கும் அள­விற்கு உயர்ந்­துள்­ளது. பொருட்­கள் வினி­யோ­கம் பர­வ­லாகி வரு­வ­தால், மக்­களின் தேவை உயர்ந்­துள்­ளது. நாட்­டின் ஒட்­டு­மொத்த வளர்ச்சி சூடு­பி­டித்­துள்­ளது என, நம்­பிக்­கை­யு­டன் கூற­லாம். கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக, மத்­திய அரசு, வளர்ச்சி ஒன்­றையே இலக்­காக கொண்டு, பொரு­ளா­தா­ரம், சமூ­கம், அரசு அமைப்­பு­கள் என, பல­மு­னை­களில் சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொண்டு வரு­கிறது.

நீண்ட கால பயன்­களை கருதி எடுக்­கப்­பட்டு வரும் இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள், நாட்டை உய­ரிய வளர்ச்­சிப் பாதையை நோக்கி இட்­டுச் சென்று கொண்­டி­ருக்­கின்றன. இத்­த­கைய சீர்­தி­ருத்­தங்­கள், ஒழுங்­கு­மு­றை­யான பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்கி வரு­வ­தில், முக்­கிய பங்கு வகிக்­கின்றன. இத­னால், உல­கில், மிக வேக­மான பொரு­ளா­தார வளர்ச்­சியை காணும் நாடு என்ற வலி­மையை, இந்­தியா பெறும்.

தொழில் துறை வளர்ச்சி:
நாட்­டின் தொழில் துறை உற்­பத்தி, 17 மாதங்­களில் இல்­லாத வகை­யில், 2017, நவம்­ப­ரில், 8.4 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. தயா­ரிப்பு துறை உற்­பத்தி, 10.2 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. பொறி­யி­யல் சாத­னங்­கள், நுகர்­வோர் சாத­னங்­கள், சுரங்­கம், மின்­சா­ரம் ஆகிய துறை­களும், உற்­பத்­தி­யில் வளர்ச்சி கண்­டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)