பதிவு செய்த நாள்
23 ஜன2018
10:06
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளன. முதன்முதலாக சென்செக்ஸ் 36 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 11 ஆயிரம் புள்ளிகளையும் கடந்தது.
நேற்றைய வர்த்தகம் முடியும்போதே நிப்டி 11 ஆயிரம் புள்ளிகளை நெருங்குகிறது என்று சொல்லியிருந்தோம். அதன்படி இன்று(ஜன., 23) இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 134.91 புள்ளிகள் உயர்ந்து 35,932.92-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 11,009.20-ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து 9.30 மணியளவில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து 36 ஆயிரம் புள்ளிகளை எட்டி வரலாற்று சாதனையை எட்டியது.
ஆசிய, ஐரோப்பிய உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றமான சூழல், சர்வதேச பன்னாட்டு நிதியகம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2018-ம் ஆண்டில் 7.4 சதவீதமும், 2019-ல் 7.8 சதவீதமும் இருக்கும் என கணித்திருப்பது, நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகி வருவதால் உள்நாட்டு நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு இருப்பது ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் அதிகளவில் ஏற்றத்துடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|