‘பெண்களை முன்னேற்றினால் இந்தியா வளர்ச்சி அதிகரிக்கும்’‘பெண்களை முன்னேற்றினால் இந்தியா வளர்ச்சி அதிகரிக்கும்’ ... பாரத் டைனமிக்ஸ்: பங்கு வெளியீட்டிற்கு வருகிறது பாரத் டைனமிக்ஸ்: பங்கு வெளியீட்டிற்கு வருகிறது ...
இந்தியாவும், வர்த்தகமும் பிரிக்க முடியாதவை: பிரதமர் மோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2018
00:56

டாவோஸ் : ‘‘சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளுக்கு, இந்­தி­யா­வில், ஏரா­ள­மான வர்த்­தக வாய்ப்­பு­கள் காத்­தி­ருக்­கின்றன,’’ என, பிர­த­மர் நரேந்திர மோடி தெரி­வித்து உள்­ளார்.

அவர், சுவிட்­சர்­லாந்தின், டாவோஸ் நக­ரில், சர்­வ­தேச தொழி­ல­தி­பர்­க­ளுக்கு விருந்து கொடுத்­தார். இதில், ஏர்­பஸ் குழும தலைமை செயல் அதி­காரி, டிர்க் ஹோக், ஹிட்­டாச்சி குழும தலை­வர், ஹிரோகி நகா­நிஷி உள்­ளிட்ட, பன்­னாட்டு குழு­மங்­க­ளைச் சேர்ந்த, 40 பேரும், இந்­தி­யா­வின் முன்­னணி தொழி­ல­தி­பர்­கள், 20 பேரும் பங்­கேற்­ற­னர்.

இது குறித்து, வெளி விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர், ரவீஷ் குமார் கூறி­ய­தா­வது: விருந்து நிகழ்ச்­சி­யில், ‘இந்­தியா என்­றால் வர்த்­த­கம்’ என்ற தலைப்­பில், பிர­த­மர் மோடி உரை­யாற்­றி­னார். அப்­போது அவர், இந்­தி­யா­வில் உள்ள வள­மான வர்த்­தக வாய்ப்­பு­க­ளை­யும், சுல­ப­மாக தொழில் துவங்­கு­வ­தற்­கான சூழ­லை­யும் எடுத்­துக் கூறி, தாரா­ள­மாக முத­லீடு செய்ய வரு­மாறு, பன்­னாட்டு தொழில் அதி­பர்­களை கேட்­டுக் கொண்­டார்.

மத்­திய அரசு, பல்­வேறு துறை­களில் மேற்­கொண்டு வரும் சீர்­தி­ருத்­தங்­க­ளை­யும் பட்­டி­ய­லிட்­டார். பன்­னாட்டு நிறு­வ­னங்­களை ஈர்க்­கும் நோக்­கில், அன்­னிய நேரடி முத­லீட்டு விதி­மு­றை­கள் மேலும் தளர்த்­தப்­பட்டு உள்­ள­தை­யும், அவர் சுட்­டிக்­காட்­டி­னார். இந்­தியா என்­றாலே, அங்­குள்ள எண்­ணற்ற வர்த்­தக வாய்ப்­பு­கள் தான், உல­கி­ன­ரின் கவ­னத்­திற்கு வரும்; இந்­தி­யா­வை­யும், வர்த்­த­கத்­தை­யும் பிரித்­துப் பார்க்க முடி­யாது என்­றும், அவர் பெரு­மி­தத்­து­டன் தெரி­வித்­தார்.

இந்­நி­கழ்ச்­சியை தொடர்ந்து, பிர­த­மர் மோடி, சுவிட்­சர்­லாந்து அதி­பர், அலைன் பெர்­சட்டை சந்­தித்து பேசி­னார். அப்­போது, இந்­தியா – சுவிஸ் பரஸ்­பர வர்த்­த­கத்தை உயர்த்­து­வது குறித்து, இரு­வ­ரும் ஆக்­க­பூர்­வ­மான சிந்­த­னை­களை பகிர்ந்து கொண்­ட­னர். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)