பதிவு செய்த நாள்
25 ஜன2018
02:47
மும்பை : இந்திய பங்குச் சந்தைகள், தொடர்ந்து, ஆறு வர்த்தக தினங்களாக, புதிய உச்சத்தை எட்டி வருகின்றன.நேற்று, மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, வர்த்தகத்தின் இடையே, 36,268.19 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வர்த்தகத்தின் இறுதியில்,முன்தினத்தை விட, 21.66 புள்ளிகள் அதிகரித்து, 36,161.64 ஆக, புதிய நிலைக்கு உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடும், வர்த்தகத்தின் இடையே, 11,110.10 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வர்த்தகத்தின் இறுதியில், முன்தினத்தை விட, 2.30 புள்ளிகள் உயர்ந்து, 11,083.70 ஆக, புதிய நிலையை எட்டியது.அன்னிய நிதி நிறுவனங்கள், தொடர்ந்து சில நாட்களாக, பங்குகளை வாங்கிக் குவித்து வருவதால், நாள்தோறும் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை சந்திக்கின்றன.வங்கி மறு பங்கு மூலதனம் குறித்து, மத்திய அரசு புதிய அறிவிக்கை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, நேற்று, வங்கி பங்குகள் விலையேற்றம் கண்டன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|