பதிவு செய்த நாள்
27 ஜன2018
01:12
புதுடில்லி : இந்தியாவில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, இலவச பெயர் பதிவு திட்டம், இன்று அறிமுகமாகிறது.
இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில், தொழில் துவங்குவதை சுலபமாக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக, 10 லட்சம் ரூபாய் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தைக் கொண்ட எந்த நிறுவனமும், அதன் பெயரை கட்டணமின்றி, பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்காக, ‘ரன்’ என்ற வலைதள சேவை இன்று துவங்கப்படுகிறது. இதில், புதிதாக தொழில் துவங்க உள்ள நிறுவனங்கள் அவற்றின் பெயரை, இலவசமாக முன்பதிவு செய்யலாம். இத்துடன், நிறுவனங்களின் இயக்குனர்களுக்கு குறியீட்டு எண் ஒதுக்கும் நடைமுறையும் சீரமைக்கப்பட்டுள்ளது.
இனி, ஒருவர் இயக்குனராக நியமனம் செய்யப்பட்ட பின்னரே, அவருக்கு, குறியீட்டு எண் ஒதுக்கப்படும். இத்தகைய நடவடிக்கைள், இந்தியாவில் தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|