பதிவு செய்த நாள்
27 ஜன2018
01:13
புதுடில்லி : ‘சுற்றுலா துறை முன்னேற, மத்திய பட்ஜெட்டில், வரி குறைப்பு செய்ய வேண்டியது அவசியம்’ என, மத்திய அரசுக்கு, முன்னணி சுற்றுலா நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
பீட்டர் கெர்கர், தலைமை செயல் அதிகாரி, காக்ஸ் அண்டு கிங்ஸ்: உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க, ஓட்டல் அறைகளின் வரியை குறைக்க வேண்டும். தற்போது, 2,500 –- 7,500 ரூபாய் உள்ள ஓட்டல் அறை வாடகைக்கு, 18 சதவீத, ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது. அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது, இது மிக அதிகம். வேலைவாய்ப்பு மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு, சுற்றுலா துறை, முக்கிய பங்காற்றுகிறது. அதனால், இத்துறையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் அளிக்க வேண்டும்.
தீப் கல்ரா, நிறுவனர், மேக் மை ட்ரிப்: தாய்லாந்து, மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் போட்டியை சமாளிக்க, அங்குள்ளது போன்ற வரி விதிப்பை, இங்கு அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, அந்நாடுகளில் ஓட்டல் அறைகளின் வரி குறைவாக உள்ளது; இந்தியாவில் அதிகமாக உள்ளது. இதை, சுற்றுலா பயணியர் கூடுதல் சுமையாக கருதுகின்றனர். சுற்றுலா துறைக்கு, அடிப்படை கட்டமைப்பு வசதி மிக முக்கியமானது. அதனால், இத்துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க, ஊக்கச்சலுகைகளை வழங்க வேண்டும். சுற்றுலா துறையில், உள்நாட்டில்வழங்கப்படும் சேவைக்குத் தான் வரி வசூலிக்க வேண்டும்.
வெளிநாட்டில் வழங்கப்படும் சேவைக்கு வரி வசூலிக்கக் கூடாது. இதனால், சுற்றுலா செலவு அதிகரிக்கிறது. இந்தியாவில் சேவையை பயன்படுத்தாத நிலையில், வெளிநாட்டு சேவைக்கும் வரி செலுத்துவது நியாயமற்றது என, வாடிக்கையாளர்கள் புலம்புகின்றனர். ஆகவே, பட்ஜெட்டில், இந்த வரி விதிப்பு முறையில் மாற்றம் தேவை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|