பதிவு செய்த நாள்
27 ஜன2018
01:16
சென்னை : டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தின் கம்பி வட தொலை தொடர்பு சேவை பிரிவை, அதன் ஊழியர்களே, 100 கோடி டாலருக்கு, அதாவது, 6,500 கோடி ரூபாய் மதிப்பிற்கு வாங்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின், நன்னெறி பிரிவின் தலைவர், முகுந்த் கோவிந்த் ராஜன் தலைமையிலான ஊழியர் குழு, டி.பி.ஜி., கேப்பிட்டல் என்ற தனியார் பங்கு முதலீட்டு நிறுவனத்தின் உதவியுடன், இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இது வெற்றி பெற்றால், இந்தியாவில், மிகப்பெரிய மதிப்பிலான ஒரு நிறுவனத்தை, அதன் தொழிலாளர்களே ஏற்ற திட்டம் என்ற சிறப்பை பெறும்.கடும் இழப்பை சந்தித்து வந்ததால், டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தின், மொபைல் போன் சேவை பிரிவு, 2017 அக்டோபரில்,ஏர்டெல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது.
டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தில், 2008- – 10 வரை, நிர்வாக இயக்குனராக இருந்த முகுந்த் கோவிந்த் ராஜன், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|