பதிவு செய்த நாள்
30 ஜன2018
00:10
புதுடில்லி : ‘மத்திய பட்ஜெட்டில், மருத்துவ உபகரணங்கள் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படும்’ என, தெரிகிறது.
மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி வரியை, தற்போதைய, 0 – 7.5 சதவீதத்தில் இருந்து, 5 – 15 சதவீதமாக உயர்த்த வேண்டும்’ என, இந்திய மருத்துவ உபகரண நிறுவனங்கள் கூட்டமைப்பு, மத்திய நிதியமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க, மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி வரியை உயர்த்துவது குறித்து, நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. பட்ஜெட்டில், ஒரு சில மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி வரி உயர்த்தப்படலாம்.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் அறிமுகமாகி, மூன்று ஆண்டுகள் ஆகியும், மருத்துவ உபகரணங்கள் துறையில், உள்நாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. மருந்து தயாரிப்பு துறையில், சர்வதேச அளவில், இந்தியா கோலோச்சுகிறது. அதுபோல, மருத்துவ சாதனங்கள் துறையிலும் வளர்ச்சி காண, இறக்குமதி வரி உயர்த்தப்படும் என, தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|