பதிவு செய்த நாள்
31 ஜன2018
00:13
சென்னை : ‘‘தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு, புதிய சந்தைகள் கண்டறியப்படும்,’’ என, தோல் ஏற்றுமதி குழு தலைவர், முக்தருல் அமின் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில், ஐரோப்பிய நாடுகள், பெரும் பங்கு வகிக்கின்றன. சமீபகாலமாக, வங்கதேசம், வியட்னாம் ஆகிய நாடுகள், கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளன. வங்கதேசம், தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு, ரொக்க ஊக்கத் தொகை வழங்குகிறது. இத்தகைய போட்டியை சமாளிக்க, அமெரிக்கா, ரஷ்யா, ஆப்ரிக்கா போன்ற புதிய சந்தைகளை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், மார்ச்சில் நடைபெற உள்ள, தோல் பொருட்கள் கண்காட்சியில், 50 ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
அமெரிக்காவில், தோல் பொருட்கள் ஏற்றுமதி தொடர்பாக, அங்குள்ள வர்த்தக அமைப்புகளிடம் பேசி வருகிறோம். நான்கு ஆண்டுகளாக, பின்னடைவில் இருந்த, தோல் பொருட்கள் ஏற்றுமதி, 2017, ஏப்ரல் – டிசம்பர் வரையிலான காலத்தில், 1.48 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. இதை, அடுத்த நிதியாண்டில், 10 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|