பதிவு செய்த நாள்
31 ஜன2018
00:14
டாவோஸ் : ‘‘தங்கத்தை விஞ்சிய பாதுகாப்பான முதலீடாக, மெய்நிகர் கரன்சிகள் விளங்க முடியாது,’’ என, கோட்டக் மகிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குனர், உதய் கோட்டக் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: தற்போது ஏராளமான மெய்நிகர் கரன்சிகள் முளைக்கின்றன. சில வாரங்களுக்கு முன், 20 ஆயிரம் டாலர் வரை சென்ற, ‘பிட்காய்ன்,’ தற்போது, 10 ஆயிரம் டாலருக்கும் குறைவாக வீழ்ச்சி கண்டுள்ளது. ஆகவே, உலகளவில், எவ்வித பிரச்னையும் இன்றி செல்லுபடியாகக் கூடிய ஒரே மெய்நிகர் கரன்சி, தங்கம் தான். எந்த விதமான அரசின் ஆதரவோ அல்லது கட்டுப்பாடுகளோ இல்லாத மாற்று கரன்சி எதுவென்றால், அது தங்கம் தான்.
மக்கள், தங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து முதலீடு செய்கின்றனர். அதற்கு ஈடான நம்பிக்கையை பெறும் மாற்று கரன்சி உருவாகும் வரை, புதிதாக முளைக்கும் மெய்நிகர் கரன்சிகளுக்கு, அரசுகள் அங்கீகாரம் வழங்குவது கடினம். ரியல் எஸ்டேட் துறை விரைவில் எழுச்சி காண்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், நிலத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் எல்லாம், நிதி சார்ந்த சொத்துகளுக்கு மாறி விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|