பதிவு செய்த நாள்
31 ஜன2018
00:17
மும்பை : நடப்பு நிதியாண்டில், இதுவரை, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையில், எல்.ஐ.சி., 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில், டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், எல்.ஐ.சி., பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில், 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதில், 2 லட்சம் கோடி ரூபாய், அரசு கடன் பத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடாகும். இதர நிறுவனங்களின் பங்குகளில், 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுத் துறை நிறுவனங்கள் மேற்கொண்ட பங்கு வெளியீடுகளில், மத்திய அரசின் குறிப்பிட்ட சதவீத பங்குகளில், எல்.ஐ.சி., 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. நிறுவனத்திற்கு, பங்குச் சந்தை மூலம், கடந்த நிதியாண்டில், 19 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. நடப்பு நிதியாண்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|