பதிவு செய்த நாள்
31 ஜன2018
00:19
புதுடில்லி : கடந்த ஆண்டு, வலைதளங்கள் மூலம் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை, மாதாந்திர அளவில், 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ரெட்சீர் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: வலைதள சந்தை நிறுவனங்கள், கவர்ச்சியான தள்ளுபடி சலுகைகளை வழங்குகின்றன. அதனால், வலைதளங்களில் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு, பெரு நகரங்கள் தவிர்த்து, சிறிய நகரங்களின் பங்களிப்பும் உயர்ந்து உள்ளது தான் காரணம். கடந்த ஆண்டு, வலைதளங்கள் வாயிலான பொருட்கள் விற்பனையில், இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களின் பங்கு, 41 சதவீதமாக உள்ளது. இது, இந்தாண்டு மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் நிலை நகரங்களில், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்கள் வாயிலான விற்பனை அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில், 85 சதவீத புதிய வாடிக்கையாளர்கள், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து கிடைத்ததாக, அமேசான் கூறுகிறது. இது, 2016ல், 70 சதவீதமாக இருந்தது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் பண்டிகை கால விற்பனையில், இரண்டாம் நிலை நகரங்களின் பங்கு, 65 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவை விஞ்சியது:
இந்தியா, 2017, அக்டோபரில், அமெரிக்காவின் ஸ்மார்ட்போன் சந்தையை விஞ்சி வளர்ச்சி கண்டுள்ளது. சர்வதேச மொபைல்போன் சந்தையில், இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, அக்., – டிச., வரையிலான காலாண்டில், 4 கோடி ஸ்மார்ட்போன்கள், இறக்குமதியாகி உள்ளன. அதில், ஜியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்களின் பங்கு, 50 சதவீதத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|