பதிவு செய்த நாள்
01 பிப்2018
03:34
புதுடில்லி : தனியார் துறையில் முதலிடத்தில் உள்ள, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின், அக்., – டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், 27 சதவீதம் சரிவடைந்து, 1,894 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 2,611 கோடி ரூபாயாக இருந்தது. வாராக் கடனுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்ததால், வங்கியின் நிகர லாபம் குறைந்துள்ளது. இதே காலத்தில், வங்கியின் வருவாய், 27,876 கோடியில் இருந்து, 28,501 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வட்டி வருவாய், 6 சதவீதம் அதிகரித்து, 5,363 கோடியில் இருந்து, 5,705 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த வாராக் கடன், 7.20 சதவீதத்தில் இருந்து, 7.82 சதவீதமாக ஏற்றம் கண்டுள்ளது. வாராக் கடன்கள் மற்றும் இதர செலவினங்களுக்கான ஒதுக்கீடு, 2,713 கோடியில் இருந்து, 3,570 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கி எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, மீட்கப்பட்ட வாராக் கடன் தொகை, 625 கோடியில் இருந்து, 1,108 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|