பதிவு செய்த நாள்
01 பிப்2018
03:35
வாஷிங்டன் : சமூக வலைதள நிறுவனமான, பேஸ்புக், ‘கிரிப்டோகரன்சி’ எனப்படும், மெய்நிகர் கரன்சிகள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும், தடை செய்துள்ளது.
வலைதளங்களில், ‘பிட்காய்ன், எத்திரியம்’ உள்ளிட்ட மெய்நிகர் கரன்சிகள் புழங்குகின்றன. இந்த கரன்சிகளின் அடிப்படையில், பங்கு வெளியீடு போல, ஐ.சி.ஓ., எனப்படும் டோக்கன்களை வெளியிட்டு, நிதி திரட்டும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்காக, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், இந்நிறுவனங்கள், கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிடுகின்றன.
இந்நிலையில், மோசடி விளம்பரங்களை வெளியிட்டு, முதலீட்டாளர்களை ஏமாற்றிய புகாரின் பேரில், அரைஸ்பேங்க் நிறுவனத்தின், ஐ.சி.ஓ., வெளியீட்டை, அமெரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம், சமீபத்தில் முடக்கியது. இதையடுத்து, பேஸ்புக் நிறுவனம், மெய்நிகர் கரன்சி மற்றும் ஐ.சி.ஓ., தொடர்பான விளம்பரங்களை, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஆடியன்ஸ் நெட்ஒர்க் உள்ளிட்ட தன் வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|