பதிவு செய்த நாள்
01 பிப்2018
03:36
புதுடில்லி : மாநிலங்கள் இடையே, குடிநீர் குழாய்கள், தொலைதொடர்பு கேபிள்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை பகிர்ந்து கொள்ளும் திட்டம் அமலுக்கு வர உள்ளது.
தேசிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஆலோசனை கூட்டம், டில்லியில் நடைபெற்றது. இதில், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், தொலைதொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்கா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், மின் துறை அமைச்சர், ஆர்.கே.சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆலோசனை கூட்டத்தில், தொலைதொடர்பு அமைச்சக செயலர் தலைமையில், அனைத்து அமைச்சக செயலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு, மாநிலங்கள் இடையே, குடிநீர் குழாய்கள், தொலைதொடர்பு கேபிள்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும். மாநில அரசுகள் இடையே, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பகிர்ந்து கொள்ளப்படுவதால், அதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், இதற்காக, தனி ஒப்பந்தம் மேற்கொள்வது எனவும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பராக்கா – பாட்னா இடையிலான தேசிய நீர்வழி போக்குவரத்து குறித்த, நதிநீர் தகவல் திட்டத்தில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் தொலைதொடர்பு இணைப்பு சேவை மோசமாக உள்ளது. அதனால், சேவையின் தரத்தை உயர்த்த வேண்டும் என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 12 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|