பதிவு செய்த நாள்
01 பிப்2018
13:15
மும்பை : நேற்று சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கின. பட்ஜெட்டில் புதிய அறிவிப்புக்கள், வரி விலக்குகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக முதலீட்டாளர்களின் வருகையும் அதிகரித்தது.
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பங்குகளில் முதலீடு செய்யப்படும் பரஸ்பர நிதி வருவாய்க்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இதனையடுத்து பகல் 12.45 மணியளவில் பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன. பின்னர் 1.15 மணியளவில் மீண்டும் உயர்வு பாதைக்கு திரும்பின.
சென்செக்ஸ் 387.84 புள்ளிகள் சரிந்து 35,577 புள்ளிகளாகவும், நிப்டி 118.50 புள்ளிகள் சரிந்து 10,909.20 புள்ளிகளாகவும் இருந்தன. பொதுத்துறை வங்கிகள், உலோகம், மருந்து உற்பத்தி துறை ஆகியவற்றின் பங்குகள் சரிந்ததை அடுத்து நிப்டி 2 சதவீதம் வரை சரிந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|