பதிவு செய்த நாள்
04 பிப்2018
02:11
மும்பை:‘நடப்பாண்டு, மார்க்கெட்டிங் நிறுவனங்கள், ஆட்டோ மேஷன், கருத்துரு
வாக்கம் மற்றும் வீடியோ தொழில்நுட்பங்களுக்கு, அதிக முன்னுரிமை அளிக்கும்’ என,
ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
‘லிங்டுஇன்
இந்தியா’ நிறுவனம், இந்தியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும்
ஹாங்காங் நாடுகளைச் சேர்ந்த, 779 மார்க்கெட்டிங் நிறுவனங்களின்
செயல் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, ‘நாளைய மார்க்கெட்டிங் குழு’
என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.
அதன் விபரம்:
இந்தாண்டு,
மார்க்கெட்டிங் நிறுவனங்களின் செயல் திட்டங்கள் அனைத்தும்,
தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமையும். மார்க்கெட்டிங்
குழுக்கள், வெளியில் இருந்து, திறமை வாய்ந்த தொழில்நுட்ப
வல்லுனர்களின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளும். அதே சமயம், நிறுவனபணியாளர்கள் மூலம், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதிலும்
கவனம் செலுத்தும்.
நிறுவனங்கள், உயர் தரமான, ‘பிராண்டு’ கருத்துருவாக்கத்தை, வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். தலைசிறந்த கருத்துருவாக்கம் மூலம், வாடிக்கையாளரின் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை சம்பாதிக்கத் தலைப்படும்.இந்தியாவில், ஆய்வில்பங்கேற்ற
நிறுவனங்களில், 97 சதவீதம், அவற்றின் மார்க்கெட்டிங் குழுக்களை
விரிவாக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்து உள்ளன.
இவை,
தன்னம்பிக்கை, வசீகரிக்கும் பேச்சாற்றல் உள்ளிட்ட
மென்திறன்களில், சிறந்து விளங்குவோரை பணிக்கு அமர்த்த திட்டமிட்டு
உள்ளன.பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பது, கொள்கை திட்டங்களை வகுப்பது போன்ற, அறிவுத் திறனில் சிறந்து விளங்குவோரை பணிக்கு அமர்த்த உள்ளதாக, 88 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன.
கணக்கியல்,
நேர மேலாண்மை, நல்லுறவு வளர்க்கும் ஆற்றல் உள்ளோருக்கு
வேலைவாய்ப்பு வழங்க, 89 சதவீத நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.இந்தாண்டு, இந்திய
மார்க்கெட்டிங் நிறுவனங்கள்,அவற்றின் நிதி ஒதுக்கீட்டை, 74 சதவீதம் அதிகரிக்க
உள்ளதாக கூறியுள்ளன.
இது, ஆஸ்திரேலியா, 19 சதவீதம்; சிங்கப்பூர், 25 சதவீதம்; ஹாங்காங், 33 சதவீதம் ஆகியவற்றை விட அதிகமாகும்.இந்நிறுவனங்களின்
முதலீடுகளில், ‘ஆட்டோமேஷன்’ எனப்படும், தன்னிச்சையான
செயல்பாடுகளுக்கான சாப்ட்வேர் பயன்பாடு, வீடியோ கருத்துரு மற்றும்
சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அம்சங்கள் முன்னிலை வகிக்கின்றன.
மேலும், தரவு ஆய்வுகள்,
இயந்திர கல்வியியல், தன்னிச்சையாக விளம்பரங்களை ஈர்க்கும்
தொழில்நுட்பம் ஆகிய மூன்று தொழில்நுட்பங்களுக்கு, முன்னுரிமை
அளிக்கப்படும் என, மார்க்கெட்டிங் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இத்துடன்,
வாடிக்கையாளரை ஈர்ப்பது மற்றும் தக்க வைத்துக் கொள்வதில் கவனம்
செலுத்த உள்ளதாக, முறையே, 92 மற்றும் 83 சதவீத
நிறுவனங்கள் கூறியுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுயுகம்
சிறந்த
கருத்துருவாக்கத்துடன் கூடிய விளம்பர முறை தான், இன்றைய
மார்க்கெட்டிங் துறையின் மையப்புள்ளியாக உள்ளது. தகவல்களும்,
கருத்துருவாக்கமும் வீடியோ வடிவில் வழங்கப்படுகின்றன. இது போன்ற
புதுயுக மார்க்கெட்டிங் முறையில், இந்திய நிறுவனங்களுக்கு
தற்போது பரிட்சயம் ஏற்பட்டுள்ளது.
விர்ஜினியா சர்மா
இயக்குனர், மார்க்கெட்டிங் சொல்யூஷன்ஸ் பிரிவு,
லிங்டுஇன் இந்தியா
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|