பதிவு செய்த நாள்
07 பிப்2018
10:20
மும்பை : அமெரிக்க உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தையில் காணப்பட்ட சரிவு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. இருப்பினும் நேற்று மதியத்திற்கு மேல் சற்று மீண்ட நிலையில் இன்று(பிப்., 7) வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின.
வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 470.39 புள்ளிகள் உயர்ந்து 34,666.33-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 115.75 புள்ளிகள் உயர்ந்து 10,614-ஆக வர்த்தகமாகின. காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 131.97 புள்ளிகளிலும், நிப்டி 52.85 புள்ளிகள் உயர்வுடனும் வர்த்தகமாகின.
அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டதாலும், ஆசிய பங்குச்சந்தையில் காணப்பட்ட ஏற்றத்தாலும், நேற்று பல நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததால் அதன் விலை குறைந்துள்ளது. இதையடுத்து முதலீட்டாளர்கள் அதிகளவில் சில முன்னணி நிறுவன பங்குகளை வாங்க தொடங்கியுள்ளனர். இதன்காரணமாகவும், ரிசர்வ் வங்கியின் நிதிநிலை அறிக்கை கூட்டம் இன்று நடைபெறுவதால் அதன் மீதான எதிர்பார்ப்பு காரணமாகவும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|