பதிவு செய்த நாள்
07 பிப்2018
17:47
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்த நிலையில் இன்று ஏற்றம் கண்டன. ஆன போதும் வட்டி வகிதம் மாற்றப்படாததால் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.
அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் நேற்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. கடந்த 6 நாட்களில் சென்செக்ஸ் 2,087 புள்ளிகள் சரிவை சந்தித்தன. 6 வர்த்தக தினங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியால், முதலீட்டாளர்களுக்கு, 10 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அமெரிக்க பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டதால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் 470 புள்ளிகளும், நிப்டி 115 புள்ளிகளும் உயர்ந்து காணப்பட்டன. பிற்பகலில் ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்ட முடிவில் வட்டி விகிதம் எதுவும் மாற்றம் செய்யவில்லை என்ற அறிவிப்பு வெளியானது. பணவீக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டாலும் முதலீட்டாளர்களுக்கு சிறு ஏமாற்றத்தை தந்தது. மேலும் நடப்பு பொருளாதார வளர்ச்சியை 6.7-லிருந்து 6.6 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதன்காரணமாகவும் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 113.23 புள்ளிகள் சரிந்து 34,082.71-ஆகவும், நிப்டி 21.55 புள்ளிகள் சரிந்து 10,476.70-ஆகவும் முடிந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|