கொள்கை உருவாக்கத்தில் மத்திய அரசு தீவிரம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு விடிவு வாராக்கடன் பிரச்னைக்கு விரைவில் தீர்வுகொள்கை உருவாக்கத்தில் மத்திய அரசு தீவிரம் குறு, சிறு, நடுத்தர ... ... நாட்டின் தேயிலை ஏற்றுமதி 240 மில்லியன் கிலோ நாட்டின் தேயிலை ஏற்றுமதி 240 மில்லியன் கிலோ ...
கொள்கை உருவாக்கத்தில் மத்திய அரசு தீவிரம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு விடிவு வாராக்கடன் பிரச்னைக்கு விரைவில் தீர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2018
02:31

புதுடில்லி : ‘‘குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களின், வாராக்­க­டன் பிரச்­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான கொள்கை திட்­டம், விரை­வில் அறி­விக்­கப்­படும்,’’ என, மத்­திய குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை அமைச்­சர், கிரி­ராஜ் சிங் தெரி­வித்து உள்­ளார்.மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ஜெட்லி, சமீ­பத்­திய பட்­ஜெட் உரை­யில், ‘குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களின் வாராக்­க­டன், இடர்ப்­பாட்டு கடன் ஆகி­ய­வற்­றுக்கு, தீர்வு காண்­ப­தற்­கான கொள்கை திட்­டம், விரை­வில் அறி­விக்­கப்­படும்.‘இதன் மூலம், இந்­நி­று­வ­னங்­கள் நிதி நெருக்­கடி சவால்­களை, சுல­ப­மாக சமா­ளித்து, வளர்ச்சி காண முடி­யும்’ என, தெரி­வித்­து­இருந்­தார்.அதன்­படி, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களின், வாராக்­க­டன் பிரச்­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான வழி­மு­றை­களை வடி­வ­மைப்­பது தொடர்­பாக, நிதி அமைச்­ச­கம் மற்­றும் ரிசர்வ் வங்கி அதி­கா­ரி­கள் ஆலோ­சனை நடத்தி வரு­கின்­ற­னர்.‘‘அடுத்த மாதத்­திற்­குள், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களின், வாராக்­க­டன் தீர்வு கொள்கை திட்­டம் வெளி­யா­கும்,’’ என, அமைச்­சர் கிரி­ராஜ் சிங் தெரி­வித்து உள்­ளார்.பிர­த­மர் வேலை­வாய்ப்பு உறு­தித் திட்­டத்­தில், வலை­த­ளம் வாயி­லாக, வங்கி கடன் வழங்­கும் நடை­முறை சோதித்து பார்க்­கப்­பட்­டது. இத்­திட்­டம் வெற்றி பெற்­றதை தொடர்ந்து, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கும், வலை­த­ளம் மூலம் வங்கி கடன் வழங்­கும் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட உள்­ளது.‘‘வலை­த­ளம் வாயி­லாக கடன் வழங்­கும் திட்­டம், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களின் செயல்­பா­டு­கள் குறித்த வெளிப்­ப­டைத் தன்­மைக்கு வழி­வ­குக்­கும் என்­ப­தால், வங்­கி­கள் தாரா­ள­மாக கடன் வழங்க முன்­வ­ரும். அத­னால், கட­னுக்­கான வட்டி விகி­தம் குறை­யும்,’’ என, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மேம்­பாட்டு துறை கமி­ஷ­னர், ராம் மோகன் மிஸ்ரா தெரி­வித்துள்­ளார்.‘‘ஒட்­டு­மொத்த குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறைக்கு, தற்­போ­தைய நில­வ­ரப்­படி, 1.30 லட்­சம் கோடி ரூபாய் கடன் வழங்­கப்­பட்டு உள்­ளது. இந்த தொகை, கடன் உத்­த­ர­வாத நிதி­யத்­தின் மூல­தன வரம்பு, 2,500 கோடி ரூபா­யாக இருந்த போது வழங்­கப்­பட்­டது.‘‘இந்த வரம்பு, தற்­போது, 8,000 கோடி ரூபா­யாக அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளது. அத­னால், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு, வங்­கி­கள், நெருக்­கடி ஏது­மின்றி, மேலும் ஆர்­வத்­து­டன் கடன் வழங்­கும்,’’ என, மத்­திய குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை செய­லர், அருண் குமார் பாண்டா தெரி­வித்து உள்­ளார்.‘‘விரை­வில் வெளி­யாக உள்ள, மத்­திய அர­சின் கடன் தீர்வு கொள்கை திட்­டம், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மேலும் சிறப்­பாக வளர்ச்சி காண்­ப­தற்கு துணை புரி­யும்,’’ என, அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)