பதிவு செய்த நாள்
09 பிப்2018
15:34
மும்பை : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என பிப்ரவரி 7 ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கியில் அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருக்காமல், வீடு மற்றும் கார் கடன் வட்டி விகிதங்களை உயர்த்த வங்கிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
வரும் மார்ச் அல்லத ஏப்ரல் மாத துவக்கத்தில் இந்த வட்டிவிகித உயர்வு முடிவை அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக வட்டிவிகிதத்தை உயர்த்த வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிதி சார்ந்த அடிப்படையிலான கடன் விகிதம் (marginal cost of funds-based lending rate -MCLR) உயர்த்துவதாக எச்டிஎப்சி வங்கி பிப்ரவரி 7 ம் தேதி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஆக்சிஸ், கோடாக் மகேந்திரா, யஸ் வங்கி, இண்டஸ்இண்ட் ஆகிய தனியார் வங்கிகளும் வட்டி விகதத்தை உயர்த்த திட்டமிட்டு வருகின்றன. வங்கிகளின் இந்த முடிவுக்கு எஸ்பிஐ.,யும் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|