பதிவு செய்த நாள்
10 பிப்2018
00:32
புதுடில்லி:நாட்டின் சர்க்கரை உற்பத்தி, தேவையை விஞ்சி உயரும் என்பதால், அதன் ஏற்றுமதி வரியை நீக்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:செப்., வரையிலான, நடப்பு சர்க்கரை பருவத்தில், அதன் உற்பத்தி, 2.49 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, கடந்த பருவத்தில், 2.02 கோடி டன்னாக இருந்தது. நாட்டின் சர்க்கரை தேவை, ஆண்டுக்கு, 2.42 கோடி டன் என்றளவில் உள்ளது. தேவையை விட, உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள, 20 சதவீத வரியை நீக்குவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில், குறிப்பாக, பாகிஸ்தானில் இருந்து, குறைந்த விலையில் சர்க்கரை இறக்கு
மதியாவதை தடுக்க, சுங்க வரி இரு மடங்கு உயர்த்தப்பட்டு, 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.உள்நாட்டில், சர்க்கரை ஆலைகளுக்கு, சர்க்கரை விற்பனையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|