பதிவு செய்த நாள்
10 பிப்2018
00:34
புதுடில்லி:‘‘உணவு பதப்படுத்துதல் துறையில், அடுத்த, 2 -– 3 ஆண்டுகளில், 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு குவியும்,’’ என, மத்தியஉணவு பதப்படுத்துதல்துறை அமைச்சர்,
ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது:
டில்லியில், 2017 நவம்பரில்
நடைபெற்ற, சர்வதேச உணவு மாநாட்டில், சில வெளிநாட்டு நிறுவனங்கள்,
இந்தியாவில், உணவு பதப்படுத்தும் துறையில், 1,400 கோடி டாலர்
முதலீடு செய்ய விரும்புவதாக தெரிவித்தன.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இவை வெறும் ஏட்டளவில் இல்லாமல், செயல் திட்டப் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
அதனால் அடுத்த, 2 -– 3 ஆண்டுகளில், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இத்திட்டங்கள்,
நடைமுறைக்கு வருவதை நாம் பார்க்கலாம்.
ஏற்கனவே, அமேசான் நிறுவனம், உணவு பதப்படுத்துதல் திட்டங்களை துவக்கி விட்டது.
நாட்டில்
விளையும் வேளாண் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை,
பதப்படுத்தி பாதுகாக்க, குளிர்பதன கிட்டங்கிகள் உள்ளிட்ட,
உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன. அதனால், கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள பழங்கள், காய்கறிகள் வீணாகின்றன.
இதை தடுக்க, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், குளிர்பதன
கிட்டங்கிகள் அமைக்கப்படும். வேளாண் பொருட்கள் உற்பத்தியாகும்
இடத்தில் இருந்து, நுகர்வோர் கைக்கு செல்லும் வரை, இடைப்பட்ட
பகுதிகளில் குளிர்பதன கிட்டங்கிகள் நிறுவப்படும். இதன் மூலம், உணவுப்
பொருட்கள் வீணாவதுதடுக்கப்படும்.
விவசாயிகள், தங்கள் உற்பத்திக்குஉரிய விலை பெற முடியும்.குளிர்
பதன கிட்டங்கிகள் உள்ளிட்ட, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த,
பட்ஜெட்டில், உணவு பதப்படுத்துதல் துறைக்கு, 1,400 கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|