பதிவு செய்த நாள்
10 பிப்2018
00:37
புதுடில்லி:அனல்
மின் நிலையங்களில் உற்பத்தியாகும், ‘பிளை – ஆஷ்’ என்ற, நிலக்கரி
சாம்பல் தொடர்பான விபரங்களுக்கு, வலைதளம் மற்றும், ‘மொபைல் ஆப்’ வெளியிடப்பட்டுள்ளது.இவற்றை, மத்திய மின் துறை அமைச்சர், ஆர்.கே.சிங் துவக்கி வைத்து பேசியதாவது:
இந்த வலைதளம் மற்றும்ஆப்,
நிலக்கரி சாம்பல் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களுக்கும்,
இந்த சாம்பலை பயன்படுத்தும், சிமென்ட் நிறுவனங்கள், சாலை
ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோருக்கும் இடையே, பாலமாக விளங்கும்.
தற்போது, மின் நிலையங்களில்
கிடைக்கும் நிலக்கரி சாம்பல், 63 சதவீதம் தான்
பயன்படுத்தப்படுகிறது. இதை, 100 சதவீதம் பயன்படுத்த இலக்கு
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.சாலைகள் அமைக்க, நிலக்கரி சாம்பல் பயன்படுத்துவது குறித்து ஆராயுமாறு, அதிகாரிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.‘ASH
TRACK’ என்ற ஆப், நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்களில்
உற்பத்தியாகும், 20 கோடி டன் நிலக்கரி சாம்பல் குறித்த புள்ளி
விபரங்களை அளிக்கும். இதன் மூலம், 100 -– 300 கி.மீ.,க்குள் கிடைக்கும்
நிலக்கரி சாம்பல் தொடர்பான விபரங்களை அறிந்து, தேவைக்கேற்ப
வாங்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|