பதிவு செய்த நாள்
13 பிப்2018
02:28
புதுடில்லி:இண்டோ ஸ்டார் கேப்பிட்டல் நிறுவனம், வங்கி சாரா நிதி சேவையில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’யிடம் விண்ணப்பித்து இருந்தது. இது தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த,‘செபி’, இண்டோ ஸ்டார் கேப்பிட்டல் நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வழங்கி உள்ளது.வாகனம், வீட்டுவசதி உள்ளிட்டவற்றுக்கு நிதியுதவி அளிக்கும் இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 2,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஜே.எம்.பைனான்ஷியல், கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல், மார்கன் ஸ்டான்லி இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ளன.விரைவில், பங்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பங்கு வெளியீடு முடிந்த பின், இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். இதைத் தொடர்ந்து, பங்குகள் மீது வர்த்தகம் துவங்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|