பதிவு செய்த நாள்
14 பிப்2018
00:36
புதுடில்லி:'கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில், 8.8 கோடி மொபைல் போன்கள், இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன' என, 'சைபர் மீடியா ரிசர்ச்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:
இந்தியாவிற்கு, 2017 அக்., - டிச., வரையிலான, நான்காவது காலாண்டில், 8.8 கோடி மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. முழு ஆண்டில், 28.7 கோடி மொபைல் போன்கள் இறக்குமதியாகி உள்ளன.மொபைல் போன் சந்தையில், 'சாம்சங்' நிறுவனம், 21 சதவீத சந்தை பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது. 'ஐ டெல், ஜியோமி' நிறுவனங்கள், தலா, 9 சதவீத பங்களிப்புடன், அடுத்த இடங்களில் உள்ளன.
பியூச்சர் போன் பிரிவில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின், 'லைப்' மொபைல், 27 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 'சாம்சங், மைக்ரோமேக்ஸ்' நிறுவனங்கள், முறையே, 14 சதவீதம் மற்றும் 9 சதவீதத்துடன், அடுத்த இடங்களில் உள்ளன.
ஸ்மார்ட் போன் பிரிவில், 25 சதவீதத்துடன், 'ஜியோமி'முதலிடத்தில் உள்ளது.அடுத்த இடங்களில், 'சாம்சங், லெனோவா' நிறுவனங்கள், முறையே, 21 சதவீதம் மற்றும் 9 சதவீதத்துடன் உள்ளன.சூப்பர் பிரீமியம் பிரிவில், 'ஆப்பிள்' நிறுவனம், 73 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|