பதிவு செய்த நாள்
14 பிப்2018
00:37
புதுடில்லி:‘பணவீக்கம்
குறைந்து, பருவ மழை நன்கு இருக்கும்பட்சத்தில், ஆகஸ்டில், ரிசர்வ்
வங்கி, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைக்க வாய்ப்பு
உள்ளது’ என, பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த
ஆண்டு டிசம்பரில், 5.21 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம்,
இந்தாண்டு ஜனவரியில், 5.07 சதவீதமாக குறைந்துள்ளது.வெங்காயம்,
தக்காளி ஆகியவற்றின் விலை குறைவால், நடப்பு பிப்ரவரியில்,
சில்லரை பணவீக்கம் மேலும் குறைந்து, 4.7 சதவீதமாக சரியும் என,
தெரிகிறது. ஏப்., – ஜூன் காலாண்டில், சில்லரை பணவீக்கம், 5.4
சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்துடன், ‘லா
நினோ’ தாக்கத்தால், தென் மேற்கு பருவ மழை நன்கு பொழிந்தால், ரிசர்வ்
வங்கியின் நிதிக் கொள்கை குழு, ஆகஸ்டில், வங்கிகளுக்கு வழங்கும்,
குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம்
குறைக்க வாய்ப்பு உள்ளது.
வரும், 2018 -– 19ம் நிதியாண்டில், சில்லரை பணவீக்கம், 4.8 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.ரிசர்வ்
வங்கி, சில்லரை பணவீக்க வரம்பை, 2 – -6 சதவீதமாக நிர்ணயித்து
உள்ளது. இந்த வரம்பிற்குள், சில்லரை பணவீக்கம் இருக்கும்
என்பதால், ரெப்போ வட்டி, 6 சதவீதத்தில் இருந்து, 5.75 சதவீதமாக
குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மத்திய பட்ஜெட்டில்,
விவசாயிகளின் உற்பத்திச் செலவை விட, ஒன்றரை மடங்கு அதிக விலையில்,
வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பல பொருட்களின் கொள்முதல் விலை, மொத்த விலையை விட அதிகம் உள்ளது. அதனால், பணவீக்கத்தில் தாக்கம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|